நீதிபதி: நளினி, முருகன் தொலைபேசியில் பேச அனுமதி மறுப்பது ஏன்?

நீதிபதி: நளினி, முருகன் தொலைபேசியில் பேச அனுமதி மறுப்பது ஏன்?

1 mins read
2448d42e-320f-4bad-99ce-1214bc085ab5
-

சென்னை: ஆயுள் கைதி­க­ளாக வேலூர் சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்ள முரு­க­னின் தாய் இலங்­கை­யி­லும் தங்கை லண்­ட­னி­லும் வசித்து வரு­கின்­ற­னர். அவர்­க­ளி­டம் முரு­க­னும் நளி­னி­யும் பேசு­வ­தற்கு அனு­மதி கோரி நளி­னி­யின் தாய் பத்மா சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் ஆட்­கொ­ணர்வு மனு தாக்­கல் செய்­தி­ருந்­தார். வழக்கை விசா­ரித்த நீதி­பதி கிரு­பா­க­ரன், "அவர்­களை விரைவில் விடு­தலை செய்ய தீர்­மா­னம் நிறை­வேற்­றிய நிலை­யில், தொலை­பே­சி­யில் பேச தடை விதிப்­பது நியா­யமா?" என கேள்வி எழுப்­பி­னார். மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் ஏன் அனு­மதி அளிக்­கக்­கூ­டாது என்ற கேள்வி எழுப்­பிய நீதி­பதி, கிரு­பா­க­ரன், விசா­ர­ணையை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்­தார்.