மக்கள் ஒத்துழைப்பின்றி பரவலைத் தடுப்பது சாத்தியமில்லை கிருமித்தொற்றை தடுக்க மக்களால்தான் முடியும்

மக்கள் ஒத்துழைப்பின்றி பரவலைத் தடுப்பது சாத்தியமில்லை கிருமித்தொற்றை தடுக்க மக்களால்தான் முடியும்

2 mins read
9a692742-f2e7-4cc5-9206-a293cfd288cd
கோப்புப்படம் -

சென்னை: கொரோனா கிருமிப் பரவலைத் துடைத்­தொ­ழிக்க மக்­கள் சக்­தி­யால்­தான் முடி­யும் என்று கொரோனா கிரு­மித் தடுப்­புக்­கான சிறப்பு அதி­காரி ராதா­கி­ருஷ்­ணன் கூறி­யுள்­ளார்.

"இந்­தப் பணி­யில் ஓரி­ரு­வர் இறங்­கி­னால் போதாது. ஒரு மக்­கள் இயக்­கமே இறங்­கி­னால்­தான் கிரு­மித் தொற்றை முழு­மை­யா­கக் கட்­டுப்­ப­டுத்­த­மு­டி­யும்," என்றும் அவர் மேலும் கூறி­னார்.

இந்­நி­லை­யில், மக்­க­ளின் முழு ஒத்­து­ழைப்பு இல்­லா­மல் கிரு­மிப் பர­வ­லைத் தடுப்­பது சாத்­தி­ய­மா­காது என முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமியும் தெரி­வித்­துள்­ளார்.

"வெளி­யில் செல்­லும் அவ­சி­யம் ஏற்­பட்­டால் கண்­டிப்­பாக முகக்­க­வ­சம் அணி­வ­து­டன் தனி­ம­னித இடை வெளி­யையும் பின்­பற்றவேண்­டும்," என்று அவர் வலி­ய­றுத்­தி­யுள்­ளார்.

இதற்­கி­டையே சென்னை, தண்­டை­யார்­பேட்டை மண்­ட­லத்­தில் ஆய்வு நடத்­திய ராதா­கி­ருஷ்­ணன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில், "பொது­மக்­கள் முகக்கவ­சம் அணி வதை தேசிய கடமையாக உண­ர­வேண்­டும்.

"சென்­னை­யில் தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை தின­மும் 1,000 பேர் வீதம் அதி­க­ரித்து வரு­வ­தைக் கண்டு மக்­கள் பீதி அடையவேண்­டாம்.

"சென்­னை­யில் 39,000 தெருக் கள் உள்­ளன. அவற்­றில் 6,000 தெருக்­களில் அதா­வது 16.53% தெருக்­களில் மட்­டுமே நோய்த்­தொற்று பரவி வரு­கிறது. தொற்று பர­வி­ய­வர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்தி தொற்று பரவாமல் தடுக்­கி­றோம்.

"கிரு­மியைக் கட்டுப்படுத்த மக்­கள் இயக்­க­ம் களமிறங்கவேண்டும்," என்­று கூறினார்.

தற்­போது சென்­னை­யில் உள்ள 15 மண்­ட­லங்­களில் ராய­பு­ரத்­தில் தான் அதிக அளவில் கிருமித் தொற்று பாதிப்பு காணப்படுகிறது.

நேற்று ஞாயிறு காலை நில­வரப்­படி, சென்­னை­யில் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 20,993ஆக உயா்ந்­திருந்தது. ராய­பு­ரம் மண்­ட­லத்­தில் 3,717க்கும் மேற்­பட்டோா் இக்கிருமியால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், முன்­னெச்­ச­ரிக்கை நட­ வ­டிக்­கை­யாக கொத்­த­வால் சாவடி சந்­தையை நேற்­று­மு­தல் ஒருவாரத் துக்கு மூடுவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்தது.

சென்னையில் கிருமி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலை யில், ராயபுரத்தில் உள்ள கொத்தவால் சாவடி சந்தையை ஒருவாரம் மூடுவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்தது. படம்: ஊடகம்