முகக்கவசம் அணியாவிடில் உணவகத்தில் அனுமதி இல்லை

முகக்கவசம் அணியாவிடில் உணவகத்தில் அனுமதி இல்லை

1 mins read
f851cd84-22a1-4dfc-8b7c-b9d7f39d2b36
-

சென்னை: தமி­ழ­கத்­தில் இன்று 8ஆம்தேதி முதல் உண­வ­கங்­களில் உட்­கார்ந்து சாப்­பிடவும் கடைகள், வணிக நிறுவனங்களைத் திறக்கவும் அனு­மதி அளிக்­கப்­பட்டு உள்­ளது.

முகக்கவ­சம் அணி­யாத வாடிக்கையாளர்­களைத் தங்­க­ளது கடை­கள், வணிக நிறு­வ­னங்­க­ளுக்­குள் அனு­ம­திக்­கக்­கூ­டாது எனவும் கடை உரி­மை­யா­ளர்­களும் ஊழி­யர்­க­­ளும் முகக்கவ­சங்­கள், கையு­றை­களை அணிந்­தி­ருக்­க­வேண்­டும் எனவும் அறி­வு­றுத்­தப்­பட்டு உள்­ளது.

உணவகங்களில் 50% இருக்­கை­கள்­ மட்டுமே பயன்­ப­டுத்தப்பட வேண்­டும், சாப்பிடும் மேசைக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும், குளிர்சாதன வசதியைத் தவிர்த்து, சன்னல்கள் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருக்கவேண்டும் என்பன உள்­ளிட்ட பல்வேறு நெறி­முறைகளைக் கடைப்­பி­டிக்­க­வும் உண­வ­கங்­களுக்கு உத்­த­ரவி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், உண­வ­கங்­களில் பழைய விலைகளே தொட­ரும் என்றும் உண­வு விலை உயர்த்­தப்­பட உள்­ள­தாக வெளி­யா­கும் தக­வலில் உண்மையில்லை என்றும் ஓட்­டல் உரி­மை­யா­ளர்கள் சங்­கம் தெரி­வித்­துள்­ளது.

சமை­யல் அறைகளில் பணி­யாற்­று­வோர் 30 நிமிடங்­க­ளுக்கு ஒரு­முறை கிருமி நாசினி கொண்டு கைக­ளைச் சுத்­தம் செய்­ய­வும் கைகழு­வும் இடங்­கள், கடை­க­ளின் பிற பகு­தி­களில் எச்­சில் உமி­ழக் கூடாது என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.