மதுரை: தன்னலமின்றி பொது நலத்தை பெரிதாக எண்ணி ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மாணவி நேத்ராவின் உயர் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முடிதிருத்தும் தொழிலில் காட்டிய கடின உழைப்பின் மூலம், தனது மகளின் எதிர்காலப் படிப்புச் செலவுக்காக நேத்ராவின் தந்தை மோகன் ரூ.5 லட்சத்தைச் சேமித்துள்ளார்.
"இந்தப் பணத்தை ஊரடங்கால் சிரமப்படும் ஏழை, எளிய மக்களுக்கு செலவிடும்படி தனது தந்தையிடம் கூறியுள்ளார் நேத்ரா.
"பணத்தை பின்னாளில் சேமிக்கமுடியும். ஆனால், வருமானமின்றி சிரமப்படும் ஏழை மக்க ளுக்கு உடனடியாக உதவி செய் வதை தள்ளிப்போடக் கூடாது என்ற நேத்ராவின் நல்லெண்ணத்தை அங்கீகரிக்கும் வகையில் அவரது கல்விச் செலவை அரசு ஏற்கிறது.
"செல்வி நேத்ரா இதுபோன்ற பற்பல பாராட்டுதல்களையும் அங்கீ காரத்தையும் பெற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்த்திட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்," என்று முதல்வர் பாராட்டியுள்ளார்.
பிரதமர் மோடியிடமிருந்து பாராட்டு, ஐநா சபையின் 'ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதர்' நியமனம் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது மாணவியின் உயர் கல்விச்செலவையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளதால் நேத்ராவின் நல்லெண்ணத்துக்கு நல்ல அதிர்ஷ்டம் அடித்திருப்பதாக வலைத்தளவாசிகள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் மோகன். முடிதிருத்தும் கடையின் உரிமையாளரான இவர், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 615 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் போன்றவற்றை தனது மகளின் ஆசைப்படி வழங்கினார்.
ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற கனவுடன் எட்டாம் வகுப்பில் நேத்ரா படித்து வருகிறார்.
நாங்கள் ஒரு சிறிய குடும்பத்தைச் சேர்ந்த எளிமையான மனிதர்கள். இதுபோன்ற அடுத்தடுத்த கௌர வத்தை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
மகள் நேத்ராவை வந்தடையும் கௌரவம் குறித்து
தந்தை ேமாகன்.

