திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
சிவகுமாரின் பேச்சு உலகெங்கும் உள்ள பல கோடி ஏழுமலையான் பக்தர்களுக்கும் ஆலயத்தின் பெருமைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக ஆலய நிர்வாகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
'இலக்கியம் ஆரோக்கியம் இல்லறம்' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, சிவகுமார் சில கருத்துகளை முன்வைத்தார்.
கடவுள் இருக்கிறார் என்பது உண்மையானால் சுனாமி ஏன் வந்தது என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் கோவில்களில் இந்நாள் வரை தீண்டாமையும் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடும் நிலவுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் பணக்காரர்கள் இரவெல்லாம் மதுபோதையில் இருந்துவிட்டு காலையில் குளிக்காமலேயே கோவிலுக்குச் சென்றாலும்கூட பூரணகும்ப மரியாதை அளிக்கப்படுவதாக சிவகுமார் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து அவர் மீது கோயில் நிர்வாகம் புகார் அளித்தது.

