30% உணவகங்களே திறப்பு; வாடிக்கையாளர்களும் குறைவு

30% உணவகங்களே திறப்பு; வாடிக்கையாளர்களும் குறைவு

1 mins read
8cb92217-11c3-4167-b492-90377813ba94
சென்னையில் இரு மாதங்களுக்குப் பிறகு ஏராளமான அறிவுறுத் தல்களுடன் மீண்டும் உணவகம் இயங்கியது. உணவக ஊழியர்கள் முகக்கவசம், கையுறைகளையும் அணிந்திருந்தனர். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் அரசு அனு­ம­தி­யு­டன் உண­வ­கங் கள் செயல்­ப­டத் தொடங்­கின. சென்­னை­யி­லும் உண­வ­கங்­களில் அமர்ந்து உணவு சாப்­பி­டும் நடை­முறை கடந்த 8ஆம் தேதி முதல் மீண்­டும் நடப்­புக்கு வந்­தது.

உண­வ­கங்­களில் 50% இருக் கைகளில் அமர்ந்து சாப்­பி­ட­லாம் என அரசு அனு­மதி அளித்­தி­ருந்த போதி­லும் சென்­னை­யில் 30%க்கும் குறை­வான கடை­களே திறக்­கப்­பட்­டி­ருந்­தன. வாடிக்­கை­யா­ளர்­கள் கூட்­ட­மும் குறைந்திருந்தது.

தமி­ழக அர­சின் வழி­காட்டி நெறி முறை­க­ளைப் பின்­பற்­றும் விதத்­தில், உண­வ­கங்­க­ளுக்கு வரும் வாடிக்கை யாளர்­க­ளுக்கு உடல் வெப்ப பரி சோதனை நடத்­தப்­பட்­டது.

அதே­போல சோப்பு, கிருமி நாசி­னி­யால் கைகளை நன்கு சுத்­தம் செய்­த­பின்­னரே வாடிக்கையாளர்­கள் உண­வ­கத்­துக்­குள் நுழைய அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். குளிர் சாதன வசதி பயன்­ப­டுத்த தடை உள்­ள­தால் உண­வ­கங்­களில் ராட்­சத மின் விசி­றி­கள் சுழன்­றன.

அதே­வே­ளை­யில், பல உண­வ­கங்களி­லும் பாது­காப்பு விதி­மு­றை­கள் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வது குறித்து உண­வுப் பாது­காப்­புத்­துறை அதி காரி­கள் ஆய்வு செய்­த­னர்.