சென்னை: தமிழகம் முழுவதும் அரசு அனுமதியுடன் உணவகங் கள் செயல்படத் தொடங்கின. சென்னையிலும் உணவகங்களில் அமர்ந்து உணவு சாப்பிடும் நடைமுறை கடந்த 8ஆம் தேதி முதல் மீண்டும் நடப்புக்கு வந்தது.
உணவகங்களில் 50% இருக் கைகளில் அமர்ந்து சாப்பிடலாம் என அரசு அனுமதி அளித்திருந்த போதிலும் சென்னையில் 30%க்கும் குறைவான கடைகளே திறக்கப்பட்டிருந்தன. வாடிக்கையாளர்கள் கூட்டமும் குறைந்திருந்தது.
தமிழக அரசின் வழிகாட்டி நெறி முறைகளைப் பின்பற்றும் விதத்தில், உணவகங்களுக்கு வரும் வாடிக்கை யாளர்களுக்கு உடல் வெப்ப பரி சோதனை நடத்தப்பட்டது.
அதேபோல சோப்பு, கிருமி நாசினியால் கைகளை நன்கு சுத்தம் செய்தபின்னரே வாடிக்கையாளர்கள் உணவகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். குளிர் சாதன வசதி பயன்படுத்த தடை உள்ளதால் உணவகங்களில் ராட்சத மின் விசிறிகள் சுழன்றன.
அதேவேளையில், பல உணவகங்களிலும் பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதி காரிகள் ஆய்வு செய்தனர்.

