சென்னையில் தெருத்தெருவாக அமைச்சர்கள் ஆய்வு

சென்னையில் தெருத்தெருவாக அமைச்சர்கள் ஆய்வு

1 mins read
1fa7b5e3-0533-4f69-ab5c-58e18ef63f06
படம்: ஊடகம் -

சென்னையில் கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்கவும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கவும் ஆறு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் நேற்று தெருத்தெருவாக சென்று ஆய்வு நடத்தினர். வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், அயனாவரத்தில் உள்ள திருவிக நகர் மண்டல அலுவலகத்துக்கு சென்று அங்கு துாய்மைப் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசம், வைட்டமின் மாத்திரைகள், கையுறைகள், ஆயர்வேத மருந்துகளை வழங்கினார். படம்: தமிழக ஊடகம்