மருத்துவ நிபுணர்: சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுவது முக்கியம்

மருத்துவ நிபுணர்: சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுவது முக்கியம்

2 mins read
09373f50-bf5e-4a29-be04-1885cf78c4ea
கண்காணிப்பு, பரிசோதனை, தனிமைப்படுத்துதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற பொது சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றாவிடில் கிருமிப் பரவலைத் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் -

சென்னை: சென்­னை­யில் மீண்­டும் ஊர­டங்கு உத்­த­ரவு அமல்­ப­டுத்­தப்­படும் என்ற தக­வல் தவ­றா­னது. அர­சுக்கு அத்­த­கைய நோக்­கம் எது­வும் இல்லை என தமி­ழக முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி தெரி­வித்­துள்­ளார்.

"பொய்­யான வதந்­தி­யைப் பரப்பு ­ப­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என்­று அவர் மேலும் கூறி­னார்.

டெல்டா பாச­னத்­திற்­காக மேட்­டூர் அணை­யைத் திறந்­து­விட்ட பின்னர், செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தார் முதல்­வர். அப்­போது, "இந்த ஐந்­தாம் கட்ட ஊர­டங்கு மேலும் நீட்­டிக்­கப்­படும் வாய்ப்பு உள்­ளதா?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்­பி­னர்.

இதற்கு பதி­ல­ளித்த முதல்­வர், "சென்­னை­யில் ஊர­டங்கு உத்த ரவை மீண்­டும் நீட்­டிக்­கும் எண்­ணம் இல்லை. அந்­தச் செய்­தியை வெளி­யிட்­ட­வர் மீது சட்­ட­பூர்­வ­மான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

"சுமார் 87 லட்­சம் பேர் சென்­னை­யில் வசிக்­கின்­ற­னர். இங்­குள்ள குறு­க­லான தெருக்­களில் எல்­லாம் மக்­கள் நெருக்­க­மாக, ஒரே வீட்­டில் ஏழெட்டுப் பேர் வசிக்கின்றனர்.

"இதன் கார­ண­மா­கவே கிரு­மிப் பர­வ­லும் ஒரு கட்டுக்குள் வராமல் நாளும் அதி­க­ரித்து வரு­கிறது.

"ஆறு அமைச்­சர்­கள், ஐஏ­எஸ் அதி­கா­ரி­கள் உள்­பட பலர் இந்த கொரோனா கிருமித் தடுப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

"வள­ரும் நாடு­கள், வளர்ச்சி அடைந்த நாடு­களில் எல்­லாம்கூட இக்­கி­ரு­மி­யைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யா­மல் திணறி வரு­கின்­ற­னர். இதற்கு இன்­னும் மருந்து கண்­டு­பி­டிக்­க­ப்படாமல் உள்ள நிலை­யில், மக்­கள் விழிப்­பு­ணர்­வு­டன் செயல்­பட்­டால் மட்­டுமே இதைத் தடுக்க முடி­யும்.

"கொரோனா தாக்­கம் முழு­வ­தும் குறைந்த பின்­னரே பள்­ளி­களைத் திறப்பது குறித்து முடிவு எடுக்­கப்­படும்," என்று கூறினார்.

இதற்கிடையே, "பொது சுகா­தாரப் பழக்கவழக்கங்களை நடை­ மு­றைக்குக் கொண்டு வரா­வி­டில் கிரு­மிப் பர­வலைத் தடுப்­ப­தற்கு வழி­யில்லை," என மருத்­துவ நிபு ணர் பிர­தீப் கவுர் தனது டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.