ரூ.2 செலவில் கொரோனா மருந்து கண்டுபிடிப்பு; மத்திய அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

ரூ.2 செலவில் கொரோனா மருந்து கண்டுபிடிப்பு; மத்திய அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

2 mins read
45608f68-5fba-488e-bb48-4251f5a7b8c8
-

கிருஷ்­ண­கிரி: கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தைச் சேர்ந்த வசந்­த­கு­மார் என்ற மருத்­து­வர் 2 ரூபாய் செலவில் கொரோனா மருந்­தைக் கண்டுபிடித்­துள்­ளார்.

இந்த மருந்து பொது­மக்­க­ளுக்கு வழங்­கு­வது ஏற்­பு­டை­யதா? இல்­லையா? என்­பது குறித்து பரி­சீலித்து, விரை­வாக ஒரு பதிலை சொல்­ல­வேண்­டும் என்று மத்­திய அர­சுக்கு சென்னை உயர்­ நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

"தான் கண்­டு­பி­டித்­துள்ள மருந்து குறித்­தான ஆய்வு அறிக்­கையை மனு­தா­ரர் மீண்­டும் இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி மன்­றத்­துக்­கும் மத்­திய அர­சுக்­கும் அனுப்பி வைக்­க­வேண்­டும்.

"இந்த ஆய்வு அறிக்­கையை பரி­சீ­லித்து மருத்­துவ மன்­ற­மும் மத்­திய அர­சும் உரிய முடிவை விரை­வாக அறி­விக்­க­வேண்­டும்," என்று நீதி­ப­தி­கள் தங்­கள் உத்­த­ர­வில் தெரி­வித்­துள்­ள­னர்.

வசந்­த­கு­மார் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­துள்ள மனு­வில், "கொரோனா கிரு­மித் தொற்றை குணப்­ப­டுத்த மருந்து கண்­டு­பி­டித்­துள்­ளேன்.

"இது­கு­றித்த ஆராய்ச்சிக் கட்டு­ரை­க­ளை­யும் இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி மன்­றத்­துக்கு அனுப்பி உள்­ளேன். ஆனால், இது­கு­றித்து எந்தத் தக­வ­லும் இல்லை. எனது மனுவைப் பரி­சீ­லித்து தகுந்த உத்­த­ரவைப் பிறப்­பிக்­கும்­படி மத்­திய அர­சுக்­கும் இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி மன்றத்துக்கும் உத்­த­ர­விட வேண்­டும்," என்று கூறி­ இ­ருந்­தார்.

இந்த மனுவை நீதி­ப­தி­கள் வினீத் கோத்­தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகி­யோர் நேற்று காணொ­ளிக் ­காட்சி மூலம் விசா­ரித்­த­னர்.

அப்­போது மனு­தா­ரர் சார்­பில் முன்­னி­லை­யான வழக்­க­றி­ஞர், "மனு­தா­ரர் கண்­டு­பி­டித்­துள்ள 'பீட்டா அட்­ரெ­னர்­ஜிக் பிளாக்­கர்ஸ்' மருந்து, 'சார்ஸ்', கொரோனா கிரு­மித் தொற்றை உடல் செல்­களில் நுழை­ய­வி­டா­மல் தடுக்­கும். இந்த மருந்­தின் விலை 2 ரூபாய்க்­கும் குறை­வா­ன­து­தான். இந்த மருந்தை உட்­கொண்­டால் கொரோனா அறி­குறி காய்ச்­ச­லாக மாறா­மல் தடுக்­கும். இந்த மருந்து ஏழை மக்­க­ளுக்கு பய­ன­ளிக்­கும்," என்று வாதிட்­டார்.