சுகாதாரத்துறை: அடுத்த இரு வாரங்களில் சென்னையில் பாதிப்பு அதிகரிக்கும்

சுகாதாரத்துறை: அடுத்த இரு வாரங்களில் சென்னையில் பாதிப்பு அதிகரிக்கும்

2 mins read
d2019ba8-c92f-4bc4-8b28-a8bdd15f5f11
கொரோனா கிருமித்தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து தாதியர், சுகாதாரப் பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் 453 தாதியருக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது.படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றைக் கண்­ட­றிய அதி­க­ள­வில் பரி­சோ­தனைகள் நடத்­தப்­பட்டு வரு­வ­தாக அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் தெரி­வித்­துள்­ளார்.

தொற்று அதி­க­முள்ள மராட்­டிய மாநி­லத்தை விட தமி­ழ­கத்­தில்­தான் அதி­க­மான பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­பட்டு வரு­வ­தாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

அதி­க­ள­வில் சோதனை நடத்தப்­ப­டு­வ­தால்தான் அதி­க­மான பாதிப்­பு­க­ளைக் கண்­ட­றிய முடி­வ­தா­க­வும் அமைச்­சர் கூறி­னார்.

தமி­ழ­கத்­தில் இரண்­டா­யி­ரம் தாதி­யர் பணி நிய­ம­னம் செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளுக்கு வாழ்த்து தெரி­வித்த அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர், சென்னை, காஞ்சீபுரம், திரு­வள்­ளூர் மாவட்­டங்­களில் இப்புதிய தாதி­யர்­கள் பணி­ய­மர்த்­தப்படு­வார்­கள் என்­றார்.

"சென்­னை­யில் தாதி­யர்­கள் பற்­றாக்­குறை என்ற நிலையே இருக்­காது. மாந­க­ரில் கொவிட்-19 சிகிச்­சைக்­காக படுக்கை வச­தி­கள் வேக­மாக அதி­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அரசு இயந்­தி­ரம் இரவு, பகல் பாரா­மல், ஓய்­வின்றி உழைத்­துக் கொண்­டி­ருக்­கிறது," என்­றார் அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர்.

இதற்­கி­டையே, சென்­னை­யில் உள்ள 39,537 தெருக்­களில் தற்­போது 5,210 தெருக்­களில் மட்­டுமே கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்பு இருப்­ப­தாக சுகா­தா­ரத்­துறை செய­லா­ள­ரும் மருத்­து­வ­ரு­மான ஜெ.ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் பரி­சோ­தனை எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தால் சென்­னை­யில் அடுத்த இரு வாரங்­க­ளுக்கு பாதிப்பு இருக்­கும் என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"சித்த மருத்­துவ முறை­யில் சில நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு அவர்­கள் முழு­மை­யாக குண­ம­டைந்து வீடு திரும்­பி­னர். ஒரு பக்­கம் அலோ­பதி மருத்­து­வர்­கள், இன்­னொரு பக்­கம் சித்த மருத்­து­வர்­கள் இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி கழ­கத்­தின் வழி­மு­றை­களைப் பின்­பற்றி நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளித்து வரு­கின்­ற­னர்," என்­றார் ராதா­கி­ருஷ்­ணன்.

சென்னை சாலி­கி­ரா­மத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள கொரோனா சிகிச்சை மையத்­தில் சித்த மருத்­துவ முறைப்­படி சிகிச்சை பெற்று வந்த 130 கொவிட்-19 நோயா­ளி­களில் இது­வரை 30 பேர் முழு­மை­யாக குண­ம­டைந்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

"கொவிட்-19 நோயைக் கண்ட­றிய பரி­சோ­தனை செய்­தாலே ஒரு­வர் தம்மை வீட்­டில் தனி­மைப்­படுத்­திக் கொள்ள வேண்டும் எனும் அறி­வு­றுத்­தல் நோய் பரவா­மல் இருக்க எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை.

"ஒரு­வர் பரி­சோ­தனை செய்­த­வு­டன் அவர் முடிவு வரும் வரை வீட்­டில் தனி­மை­யில் இருக்க வேண்­டும். அதே­போல் பரி­சோ­தனை முடி­வில் தொற்று இல்­லா­மல் அறி­குறி இருந்­தா­லும் வீட்­டில் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்.

"மக்களின் ஒத்துழைப்புடன் தான் கொரோனா கிருமி ஒழிப்பில் வெற்றி பெற முடியும்," என்­றும் ராதா­கி­ருஷ்­ணன் மேலும் தெரி­வித்­துள்­ளார்.