முதலீடு செய்யக் கோரி ஐந்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம்

முதலீடு செய்யக் கோரி ஐந்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம்

1 mins read
3fe428bb-ebf9-4976-a4ea-32a0d2cca506
இந்தியாவில் பல துறைகளிலும் பெரும் சாதனைகளுடன் முதல் மாநிலமாகத் திகழும் தமிழகத்தை ஆசியாவிலேயே தொழில் நடத்த தலைசிறந்த இடமாக ஆக்குவதற்கு இடைவிடா முயற்சிகள் இடம்பெற்று வருவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.  படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் பன்­னாட்டு முத­லீட்­டா­ளர்­கள் தங்­கள் தொழில் முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தற்கு ஏற்ற சூழ்­நிலை நில­வு­வ­தாக முதல்­வர் பழ­னி­சாமி தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் முத­லீடு செய்­வ­தற்­கான உகந்த சூழல்­க­ளைப் பட்­டி­ய­லிட்டு அவர் உல­கின் ஐந்து முன்­னணி நிறு­வ­னங்­க­ளுக்கு கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

கேட் ஸ்பேட், பாசில் குழு­மம், நைக்கி, அடி­டாஸ் ஏஜி, மேட்­டல் இங்க் ஆகிய ஐந்து நிறு­வ­னங்­க­ளுக்கு முதல்­வ­ரின் கடி­தம் சென்­றுள்­ளது. இந்த ஐந்து நிறு­வ­னங்­களும் நுகர்­வோர் பொருட்­கள் உற்­பத்­தியில் உல­கின் தலை­சி­றந்த நிறு­வ­னங்­க­ளாகக் கரு­தப்படு­கின்றன.

அண்­மைய சில மாதங்­க­ளாக தமி­ழ­கத்­துக்கு வெளி­நாட்டு முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்­காக அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது.

இதற்­காக பல்­வேறு நாடு­க­ளின் தூதர்­க­ளைச் சந்­திப்­பது, முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்­கான சிறப்­புப் பணிக்­கு­ழுவை அமைப்­பது என முதல்­வர் பர­ப­ரப்­பாக இயங்கி வரு­கி­றார். இந்­நி­லை­யில் பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு கடி­தம் எழு­தி­யுள்­ளார்.