காட்டு உயிரினங்களை வேட்டையாடிய மகன்; சமைத்துக் கொடுத்ததால் தாயும் கைது

காட்டு உயிரினங்களை வேட்டையாடிய மகன்; சமைத்துக் கொடுத்ததால் தாயும் கைது

2 mins read
ca539181-d6df-4da1-a21a-477cff45aabf
கைதான பிரபு, அவரது தாய் லட்சுமி. படம்: ஊடகம் -

திருச்சி: தடை செய்யப்பட்ட காட்டுப்பகுதியில் வேட்டையாடிய இளையரையும் அவர் கொன்ற விலங்குகளை சமைத்துக் கொடுத்த அவரது தாயையும் திருச்சி போலிசார் கைது செய்துள்ளனர்.

பாடாலூரைச் சேர்ந்த 30 வயதான பிரபு என்ற ஆடவர், நெடுங்கூர் வனப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தன் நண்பர்களுடன் காட்டு விலங்குகளை வேட்டையாடி வந்துள்ளார்.

காட்டுப்பன்றி, முயல், நரி ஆகியவற்றை வேட்டையாடிக் கொன்றபின் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார் பிரபு. அதன் பின்னர் அரசுப் பள்ளி ஆசிரியையான அவரது தாய் லட்சுமி அந்த விலங்குகளை சமைத்துக் கொடுத்துள்ளார்.

லட்சுமி உள்ளூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பிரபு பட்ட மேற்படிப்பை முடித்துள்ளார்.

நேற்று முன்­தி­னம் வனப்­ப­கு­தி­யில் சுற்­றித் திரிந்த பிர­புவை வனத்­து­றை­யி­னர் சந்­தே­கத்­தின் பேரில் பிடித்து விசா­ரணை செய்­த­னர். அப்­போது அவர் சில ஆண்­டு­க­ளா­கவே வன விலங்­கு­களை வேட்­டை­யாடி வந்­தது அம்­ப­ல­மா­னது.

இதை­ய­டுத்து அவ­ரது வீட்­டில் போலி­சார் சோதனை நடத்­தி­னர். அப்­போது அங்கு வன உயி­ரி­னங்­களை வேட்­டை­யா­டி­யது தொடர்­பான ஏரா­ள­மான படங்­களும் காணொ­ளிப் பதி­வு­களும் காணப்­பட்­டன.

மேலும் பாகிஸ்­தா­னில் உள்ள வேட்­டை­யா­டு­வோர் சங்­கத்­து­ட­னும் பிரபு தொடர்­பில் இருப்­பது தெரியவந்­தது. பாகிஸ்­தா­னி­யர்­க­ளு­டன் வேட்­டை­யா­டு­வது தொடர்­பான தக­வல்­களை மட்­டுமே தாம் பகிர்ந்துகொண்­ட­தாக பிரபு விளக்­கம் அளித்­துள்­ளார்.

எனி­னும் வேறு கார­ணங்­க­ளுக்­காக அவர் பாகிஸ்­தான் தரப்­பு­டன் தொடர்­பில் இருந்­தாரா என்­பது குறித்­தும் விசா­ரணை நடக்­கிறது.

மேலும் பிர­பு­வுக்கு வேட்­டை­யா­டு­வ­தில் உடந்­தை­யாக இருந்த மகா­லிங்­கம் என்ற 58 வயது முதி­ய­வ­ரும் கைதா­கி­யுள்­ளார். அவ­ரி­டம் இருந்து நாட்­டுத் துப்­பாக்கி, தலைக்­க­வச விளக்கு ஆகி­ய­வற்­றைப் போலி­சார் பறி­மு­தல் செய்­துள்­ள­னர்.