இன்று முதல் முழு ஊரடங்கு: தீவிரமடையும் கண்காணிப்பு

இன்று முதல் முழு ஊரடங்கு: தீவிரமடையும் கண்காணிப்பு

2 mins read
7e878394-f585-489a-8cca-53c2f6152a46
சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையம். படம்: ஏஎப்பி -

தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்தது

சென்னை: இன்று முதல் மாத இறுதி வரை சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு காவல்துறைக்கு அரசு தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு தொடர்பான விதிமுறைகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை முற்றிலும் குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து முறையான காரணமின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

இம்­முறை சென்­னை­யில் முழு ஊர­டங்கு மிகக் கடு­மை­யாக இருக்­கும் என்­றும், அர­சின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பொது­மக்­கள் ஒத்­து­ழைக்க வேண்­டும் என்­றும் அமைச்­சர் எஸ்.பி.வேலு­மணி வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

கொரோனா கிரு­மித்­தொற்று சமூ­கப் பர­வ­லாக மாறு­வ­தைத் தடுக்­கவே முழு ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்­சர் ஜெயக்­கு­மார் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே தமி­ழ­கத்­தில் கொவிட்-19 நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் ஒட்­டு­மொத்த எண்­ணிக்கை 50 ஆயி­ரத்­தைக் கடந்­துள்­ளது. பலி எண்­ணிக்கை 576ஆக அதி­க­ரித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் புதி­தாக 2,174 பேருக்கு கிருமி தொற்­றி­யது உறு­தி­யா­னது.

மாநி­லத்­தில் இது­வரை 27,624 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். தற்­போது 21,990 பேர் மருத்­துவ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே கிரு­மித்­தொற்று பர­வ­லைத் தடுக்க குடி­நீர் மற்­றும் கழிப்­பறை வச­தி­கள் நிறைந்த பள்ளி மற்­றும் தனி­யார் நிறு­வ­னங்­களை மக்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­தும் பகு­தி­க­ளா­கப் பயன்­ப­டுத்­த­லாம் என தமி­ழக அர­சுக்கு மாநில மனித உரி­மை­கள் ஆணை­யம் யோசனை தெரி­வித்­துள்­ளது.