சென்னை: மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சந்தையும் ஒன்று. இப்படி கூட்டம் குவிவதால் கிருமியும் அதிகம் பரவுகிறது.
இதைத் தடுக்கும் வகையில் மீன், கோழி, இைறச்சி விற்பனை செய்யும் கடைகள் ஜூன் 30 வரை திறக்கப்படாது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றின் தாக்கத்துக்கு சென்னை மாநகரம் அதிக பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.
நாளும் அதிகரித்து வரும் இக் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு நேற்று 19ஆம் ேததி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து, அத்தியாவசிய தேவையைத் தவிர்த்து மக்கள் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இறைச்சி, மீன் கடைகளும் செயல்படாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம், சைதாப்பேட்டை ஆகிய நான்கு இறைச்சிக் கூடங்கள் இயங்கி வருகின்றன.
"கிருமிப் பரவலைத் தடுக்கும் வகையில் இந்த ஊரடங்கு சமயத்தில் இந்த நான்கு இறைச்சிக் கூடங்களும் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்படாது.
"அத்துடன் அனைத்து கோழி, ஆடு, மாடு, இறைச்சி, மீன்கடைகளும் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழுமையாக மூடப்படும். இதற்கு மக்களும் வியாபாரிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள சந்தையில் மீன் கடையை வைத்து நடத்தும் பெண்கள்.
கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து கோழி, ஆடு, மாடு, இறைச்சி, மீன் கடைகளும் நேற்றுமுதல் வரும் ஜூன் 30ஆம் தேதி வரை முழுமையாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
படம்: ஊடகம்

