திண்டுக்கல்: வாஸ்து பார்ப்பவர் ஒருவரது வீட்டில் பட்டப்பகலில் கொள்ளை அடித்துவிட்டு தப்பிச் சென்ற ஆறு பேர் கொண்ட முகமூடி கும்பலைப் போலிசார் 5 மணி நேரத்தில் பிடித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், அகரம் அருகே உள்ள சுக்காம்பட்டியில் வாஸ்தீஸ்வரர் என்ற ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தின் அருகில் குடியிருக்கும் ஆலய நிர்வாகி துரை ஆதித்யனை வாஸ்து பார்ப்பது, குறிகேட்பது போன்ற காரியங்களுக்காக அரசியல் பிரமுகர்கள் நாடி வருவர் என்றும் கூறப்படு கிறது.
இந்நிலையில், ஆதித்யன் வீட்டுக்குள் பட்டப் பகலில் ஏழு பேர் கொண்ட முகமூடி கும்பல் நுழைந்தது.
ஆதித்தனையும் அவரது மனைவி, மகன், மகள், மருமகன் உள்ளிட்ட அனைவரையும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, அவர்களைக் கட்டிப்போட்டுவிட்டு 100 பவுன் நகையையும் ரூ.35 லட்சம் பணத்தை யும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றது அந்தக் கும்பல்.
இந்த சம்பவம் தொடர்பில் வேடசந்தூர் காவல்துறையினர் தங்கள் விசாரணையையும் தேடுதல் வேட்டையையும் முடுக்கிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து கொள்ளைச் சம்பவம் நடந்த 5 மணி நேரத்துக்குள் கொள்ளையர்களில் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
கொள்ளையடித்த 53 பவுன் நகைகள், ரூ.35 லட்சம் பணத்தை அவர்களிடம் இருந்து மீட்டனர். மற்ற இரு கொள்ளையர்களைப் போலிசார் தேடி வருகின்றனர்.

