சென்னைவாசிகளை உள்ளே விடாதீர்கள்: தண்டோரா முழக்கம்

சென்னைவாசிகளை உள்ளே விடாதீர்கள்: தண்டோரா முழக்கம்

1 mins read
ea308eb0-95ce-4b38-a34b-ab61a32b35a2
-

சென்னை: சென்­னை­யில் இருந்து வரு­ப­வர்­களை ஊருக்­குள் அனு­ம­திக்­கக் கூடாது என பிற மாவட்­டங்­களில் தண்­டோரா மூலம் அறி­விப்பு செய்­யும் காணொளி சமூக ஊட­கங்­களில் வேக­மா­கப் பரவி வரு­கிறது.

"சென்­னை­யில் கொரோனா கிருமி அதி­க­மாக பர­வி­யுள்­ள­தால் கிராமப் பொதுமக்­கள் அனை­வ­ரும் சென்­னை­யில் இருந்து வரு­ப­வர்­களை உள்ளே நுழைய அனு­ம­திக்­கக் கூடாது. மீறி அனு­ம­திப்­ப­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இது ஆட்­சி­யா­ளர் உத்­த­ரவு," என்று தண்­டோரா போடு­ப­வர் அறிவிப்­பது காணொ­ளி­யில் பதி­வாகி உள்­ளது. குறிப்­பாக, செங்­கல்­பட்டு மாவட்­டத்­தைச் சேர்ந்த மது­ராந்­த­கம், செய்­யூர் போன்ற பகு­தி­க­ளைச் சுற்­றி­யுள்ள கிரா­மங்­களில் தண்­டோரா போடப்­பட்டு வருகிறது.

ஆனால் இச்­செ­ய­லுக்கு பல்வேறு தரப்­பி­லும் கண்­ட­னங்­கள் எழுப்­பப்­பட்டு வரு­கிறது. அதி­லும் சென்னை­ வா­சி­கள் மத்­தி­யில் கடும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இது குறித்து அவர்­கள் கூறு­கை­யில், "ெசன்­னை­யி­லி­ருந்து வரு­ப­வர்­களை ஊருக்­குள் விடக்­கூ­டாது என்று சொல்ல யாருக்­கும் அதி­கா­ரம் இல்லை.

"இவர்­கள் என்ன வெளி­நாட்­டுக்கா போகி­றார்­கள்? தமிழ்­நாட்­டிற்­குள் உள்ள ஓர் இடத்­துக்­குத் தானே செல்­கி­றார்­கள்.

"இது­போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­வர்­கள் மீது தயவு தாட்­சண்­யம் இல்­லா­மல் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என்று அவர்­கள் குரல் எழுப்பி வரு­கின்­ற­னர். கொரோனா கிரு­மி­யால் எழுந்­தி­ருக்­கும் புது­வி­த­மான பிரச்­சி­னை­யாக இது கரு­தப்­ப­டு­கிறது.