சென்னை: திண்டிவனத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் திருமண நிகழ்ச்சிகளுக்காக தங்கத்தில் முகக்கவசம் செய்து விற்பனை செய்து வருகிறார். இது குறித்து அவர் 'டிக் டாக்'கில் காணொளிகளைப் பதிவிட்டுள்ளார்.
தங்க முகக்கவசம் குறித்து அவர் தெரிவிக்கையில், "சுத்தமான 24 காரட் தங்கத்தில் இந்த முகக்கவசத்தை உருவாக்கி உள்ளோம். ஒரு திருமண நிகழ்ச்சிக்காக இவ்வாறு செய்து தருமாறு கேட்டார்கள்.
"இதனைப் பயன்படுத்திய பிறகு வீணாகிவிடாது. தங்க முகக்கவசத்தை உருக்கி சங்கிலி, மோதிரம் என்று நமக்குத் தேவையான நகையை செய்துகொள்ளலாம்," என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மூன்று கிராம், நான்கு கிராம் என்று வெவ்வேறு எடை அளவிலும் வித்தியாசமான வடிவங்களிலும் முகக் கவசங்களை தயாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிருமியிலிருந்து பாதுகாப்பதற்கான முகக்கவசத்தின் முக்கியத்துவத்தை மறந்து அதை அலங்காரப் பொருளாக மாற்றிவிட்டார்களே என்று சமூக ஊடகங்களில் பலரும் வருத்தத்தையும் கண்டனத் தையும் பதிவிட்டு வருகின்றனர்.
அதே நேரம் திருமணத்திற்கு மட்டும் பயன்படும் புதுமையான முகக்கவசம் என்று சிலர் வர வேற்றுள்ளனர்.

