பெரம்பலூர்: பெரம்பலூரில் நாம் இந்தியர்கள் அமைப்பு சார்பில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை உடைக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்தை நடத்தியவர்கள் சீனப் பொருட்களை புறக்கணித்து இந்தியப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டுமென வலியுறுத்தி பேசினர்.
இதனைத் தொடர்ந்து, சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களான மடிக்கணினி, கைபேசி, கை விளக்கு (டார்ச் லைட்) உள்ளிட்ட பொருட்களை சாலையில் போட்டு உடைத்து சீனாவுக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலிசார் கைது செய்தனர்.

