சென்னை: ஒவ்வொரு மருத்துவமனையிலும் சுவாசக்கருவிகளுடன் கூடிய படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவர்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் அந்த தெருக்கள் முழுமை யாக பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் நடமாட்டத்துக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலர் அறிவுறுத்தி உள்ளார்.
கிருமித்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட தெரு அல்லது உள்ளூர் பகுதியில், காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் இருந்தால் அப்பகுதியில் நூறு விழுக்காடு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
"மக்கள் நெருக்கடியுள்ள பகுதியில் வசிக்கும் அபாயகரமான நிலையில் உள்ள குடும்பங்களை தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு மாற்ற வேண்டும்.
"தொடர்பு கண்டறிதல், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதி மற்றும் தனிமைப்படுத்தல் மேலாண்மை ஆகியவையே நோயைக் கட்டுப் படுத்துவதற்கான முக்கியமான செயல்பாடுகள்," என தலைமைச் செயலர் மேலும் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பதால் விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும், தாமதமின்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

