கொவிட்-19க்கு மருந்து: நீதிமன்றத்தில் மனு

கொவிட்-19க்கு மருந்து: நீதிமன்றத்தில் மனு

1 mins read
80560829-17a3-4675-a13f-528feed97f0d
எஸ்.சுப்­பி­ர­ம­ணி­யன் என்ற அந்த சித்த மருத்­து­வர், கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு தான் கண்டுபிடித்த மருந்தை அரசு ஆய்வுசெய்ய மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோப்புப்படம் -

மதுரை: கொரோனா கிரு­மித்­தொற்றை குணப்­ப­டுத்­து­வ­தற்­கான மருந்தை தாம் கண்­டு­பி­டித்­துள்­ள­தாக சித்த மருத்­து­வர் ஒரு­வர் தெரி­வித்­துள்­ளார்.

இதை­ய­டுத்து அரசு இம்­ம­ருந்தை ஆய்வு செய்ய உத்­த­ரவிடக் கோரி­ அவர் மதுரை உயர் நீதி­மன்ற கிளையை அணு­கி­யுள்­ளார்.

எஸ்.சுப்­பி­ர­ம­ணி­யன் என்ற அந்த சித்த மருத்­து­வர் தாக்­கல் செய்­துள்ள மனு­வில், 66 மூலி­கை­க­ளைக் கொண்டு தாம் புதிய மருந்து கண்­டு­பி­டித்­த­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார். இந்த மருந்தை தின­மும் கொதிக்க வைத்து 2 வேளை பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு கொடுக்க வேண்­டும். இத­னால் பக்­க­வி­ளை­வு­கள் ஏதும் இருக்­காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தமது மருந்தை மருத்­துவ நிபு­ணர்­கள் குழு ஆய்வு செய்ய உத்­த­ர­வி­டு­மாறு அவர் கேட்­டுக் கொண்­டுள்­ளார். இதையடுத்து எஸ்.சுப்­பி­ர­ம­ணி­யன் கண்­டு­பிடித்­துள்ள மருந்தை ஜூன் 26ஆம் தேதி சென்­னை­யில் உள்ள மருத்­து­வக் கழ­கத்­தின் ஹோமி­யோ­பதி இயக்­கு­ந­ரி­டம் அளித்து ஆய்­வுக்கு உட்­ப­டுத்த வேண்­டும் என நீதி­ப­தி­கள் உத்­த­ர­விட்­டுள்­ள­னர்.