போலிஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை-மகன் மரணம்

போலிஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை-மகன் மரணம்

2 mins read
4b9cbf9b-5f75-4c46-8b29-47776b68d2c2
மரணம் அடைந்த தந்தை ஜெய­ராஜ் (வலது), அவ­ரது மகன் பெனிக்ஸ். படம்: ஊடகம் -

தூத்­துக்­குடி: ஊர­டங்கு உத்­த­ரவை மீறி கடை­யைத் திறந்து வைத் திருந்ததாகக் கூறி தந்தை-மகன் இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்ற போலிசார், அவர்களைச் சிறைக்குள் ­வைத்து அடித்­துத் தாக்­கி­ய­தில் இரு­வ­ரும் உயி­ரி­ழந்தனர்.

இந்த அதிர்ச்­சி­யூட்­டும் சம்ப வத்­துக்கு கண்­ட­னம் ெதரி­வித்­தும் நீதி கேட்­டும் தமி­ழ­கம் எங்­கும் உள்ள வணி­கர்­கள் நேற்று கடை அடைப்புப் போராட்­டம் நடத்­தி­னர்.

இந்நிலையில், இச்சம்பவத்தைக் கண்­டித்து தூத்துக்­குடி மாவட்­டம், சாத்­தான்­கு­ளத்­தில் பொதுமக்­களும் வியா­பா­ரி­களும் போலி­சார் மீது நட­வ­டிக்கை எடுக்­கக்கோரி­ முழக்க மிட்டனர்.

கோவில்­பட்­டி­யில் உள்ள கிளைச் சிறை­யில் விசா­ர­ணைக் கைதி­களாக இருந்த சாத்­தான்­கு­ளத்­தைச் சேர்ந்த ஜெய­ராஜ், 58, அவ­ரது மகன் பெனிக்ஸ், 31, ஆகிய இரு­வரும் அடுத்­த­டுத்து மர­ணம் அடைந்த சம்­ப­வம் தமி­ழ­கத்­தையே உலுக்கி உள்­ளது.

இதையடுத்து, தந்தை-மகன் உயி­ரி­ழப்­புக்கு நீதி கேட்டு தமி­ழ­கம் முழு­வ­தும் கடையடைப்பு நடத்­தப்­படும் என தமிழ்­நாடு வணிகா் சங்­கப் பேரவைத் தலைவர் வெள்­ளை­யன் தெரிவித்­தி­ருந்­தார்.

மேலும், பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் குடும்­பத்­தி­ன­ருக்கு ரூ.1 கோடி நிதி வழங்­க­வேண்­டும் என­வும் அவர் வலி­யு­றுத்­தி­ உள்ளார்.

இதற்கிடையே, தந்தை-மகன் மர­ணத்­தில் குற்­றம்­சாட்­டப்­பட்டுள்ள இரு போலிஸ் அதிகாரி களையும் இடைநீக்கம் செய்து ஆட்சியர் சந்­தீப் நந்தூரி உத்­த­ர­விட்டுள்ளார். அத்துடன், சாத்­தான்­கு­ளம் போலிஸ் நிலைய போலி­சாரை கூண்­டோடு மாற்­றம் செய்­தும் உத்­த­ர­விட்­டார்.

இதற்கிடையே, விசா­ர­ணைக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட தந்தை- மகன் இறந்த சம்­ப­வத்­தில் தமி­ழக அரசு விளக்­கம் அளிக்கும்படி மனித உரி­மை­கள் ஆணை­யம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

தந்தை-மகனைப் போலிசார் கைது செய்து தாக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உயிரிழப்பிற்கு காரணமான போலிசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.