கொரோனா நோயாளிகளை 4 வகையாக பிரித்து சிகிச்சை

கொரோனா நோயாளிகளை 4 வகையாக பிரித்து சிகிச்சை

1 mins read
e0954132-2806-439f-ae0d-57c3a63427a1
சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ். படம்: ஊடகம் -

அத்­திப்­பட்டு: கொரோனா நோயாளி­களை நான்கு பிரி­வு­க­ளா­கப் பிரித்து சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தாக சென்னை மாந­க­ராட்சி ஆணை­யர் கோ.பிர­காஷ் தெரி­வித்­துள்­ளார்.

சென்னை அம்­பத்­தூர் மண்­ட­லம், அத்­திப்­பட்­டில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்­கும் பணி ெதாடர்பில் பிர­காஷ் நேற்று ஆய்வு செய்­தார்.

அதன்­பின்­னர் அவர் செய்தி யாளர்­க­ளி­டம் பேசி­ய­போது, "கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­கள் தங்­க­ளின் பாதிப்­புக்­கேற்ப நான்கு வகை­யா­கப் பிரிக்­கப்­பட்டு சிகிச்சை அளிக்­கப்­ப­டு­வார்­கள்.

"மூச்­சுத் திண­றல் உள்­ளிட்ட அறி­கு­றி­கள் அதி­கம் உள்­ள­வர்­கள் ராஜீவ் காந்தி போன்ற அரசு மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை அளிக்­கப்­படும்.

"மூச்­சுத்­தி­ண­றல் அறி­குறி குறை வாக உள்­ள­வர்­களும் காய்ச்­சல் மட்­டும் உள்­ள­வர்­களும் கொரோனா சிகிச்சை மையத்­துக்கு அனுப்­பப்­படுவார்­கள்.

"மிகக் குறை­வான அறி­குறி உடை­ய­வர்­கள் தனி­மைப்­ப­டுத்­தும் மையங்­க­ளுக்­கும் எந்த ஒரு அறி­கு­றி­யும் இன்றி கிரு­மித்­தொற்று உள்­ள­வர்­கள் அவர்­க­ளது வீடு­களிலும் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள். இவர்கள் தொலை­த்தொ­டர்பு தக­வல் தொழில்நுட்­பம் மூலம் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். இப்­படி சிகிச்சை அளிப்­பது நான்கு வகை­க­ளா­கப் பிரிக்­கப்­பட்­டுள்­ளது," என்று கூறி­னார்.