சென்னை: சென்னையில் அக் டோபர் மாதத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை உச்சம் தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையைச் சமாளிக்க சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை முற்றிலும் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையாக மாற்றும் நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னையில் நாளுக்கு நாள் கொவிட்-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அக் டோபர் மாதத்தில் இந்தப் பாதிப்பு உச்சத்தைத் தொடும் என்று எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அண்மையில் ஆய்வு அறிக்கை வழி விவரம் வெளியிட்டது.
தமிழகத்தில் சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் தினந்தோறும் தொற்று பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டு வருகிறது.
இருப்பினும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 12 நாள் ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் உச்சமடைவது இருவாரங்கள் தள்ளிப்போகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா கிருமித் தொற்றுப் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
அடுத்து வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இந்த கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் ஜூலை மாத மத்தியில் 2.75 லட்சம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இம்மாத இறு திக்குள் 71,000 பேரும் தமிழகத்தில் 1,22,000 பேரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருப்பார்கள்.
ஜூலை 15ஆம் தேதியில் சென்னையில் 1.5 லட்சம் பேரும் தமிழகம் முழுவதும் 2,76,000 பேரும் கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுதா சேஷய்யனும் தொற்றுநோய்த் துறை தலைவர் சீனிவாசனும் தெரிவித்துள்ளனர்.

