தீவிர கண்காணிப்பில் மதுரை

தீவிர கண்காணிப்பில் மதுரை

1 mins read
61b93582-c75e-4228-995a-67f6ada6952c
மதுரையில் மாட்­டுத்­தா­வணி, ஆரப்­பா­ளை­யம், பெரி­யார் ஆகிய பேருந்து நிலையங்­கள் மூடப்­பட்­டுள்­ளன. மாவட்ட எல்­லை­க­ளைக் கண்­கா­ணிக்க ஏற்­கெ­னவே 6 சோத­னைச் சாவடிகள் அமைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், தற்­போது மேலும் 8 சோத­னைச் சாவ­டி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. படம்: ஊடகம் -

மதுரை: மது­ரை­யில் முழு ஊர­டங்கு அம­லுக்கு வந்­துள்ள நிலை­யில், மாவட்ட நிர்­வா­கம் மற்­றும் காவல் துறை­யி­னர் தீவிர கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

காய்­கறி, பல­ச­ரக்கு உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள் விற்­பனை செய்­யப்­படும் கடை­கள் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை திறந்­தி­ருக்க அனு மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன் தேநீர் கடை­களை திறக்­கக்­கூ­டாது என அறி­விக்­கப் பட்­டுள்ள நிலை­யில், உண­வ­கங் களில் காலை 6 முதல் இரவு 8 மணி வரை பொட்­ட­லங்களில் உணவை வாங்­கிச் செல்லலாம் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், மாட்­டுத்­தா­வணி, ஆரப்­பா­ளை­யம், பெரி­யார் ஆகிய பேருந்து நிலையங்­கள் மூடப்­பட்­டுள்­ளன. மாவட்ட எல்­லை­க­ளைக் கண்­கா­ணிக்க ஏற்­கெ­னவே 6 சோத­னைச் சாவடிகள் அமைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், தற்­போது மேலும் 8 சோத­னைச் சாவ­டி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.