மதுரை: மதுரையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை திறந்திருக்க அனு மதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேநீர் கடைகளை திறக்கக்கூடாது என அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், உணவகங் களில் காலை 6 முதல் இரவு 8 மணி வரை பொட்டலங்களில் உணவை வாங்கிச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் ஆகிய பேருந்து நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மாவட்ட எல்லைகளைக் கண்காணிக்க ஏற்கெனவே 6 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 8 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.