போலிசார் மீது இரட்டை கொலை வழக்கு பதியும்படி போராட்டம்

போலிசார் மீது இரட்டை கொலை வழக்கு பதியும்படி போராட்டம்

1 mins read
a5b568a0-732b-4628-84e8-f634a90c483e
நெல்லை அரசு மருத்துவமனைக்கு வந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, அவரது மகள்கள், உறவினர்கள். படம்: ஊடகம் -

நாமக்­கல்: சாத்­தான்­கு­ளத்­தில் தந்­தை­யும் மக­னும் உயி­ரி­ழந்த விவ­கா­ரம் தொடர்­பில், சம்­பந்­தப்­பட்ட காவ­லர்­கள் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்ய வலி­யு­றுத்தி இன்று வெள்­ளிக்­கி­ழமை நாமக்­கல் மாவட்­டத்­தில் முழு கடை­ய­டைப்புப் போராட்­டம் நடத்­தப்­ப­டு­கிறது.

இனி­வ­ரும் காலங்­களில் இது போன்ற சம்­ப­வங்­கள் நடை­பெ­றா­மல், வணி­கர்­க­ளின் பாது­காப்பை அரசு உறுதி செய்­ய­வேண்­டும் உள்­ளிட்ட கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி இன்று நாமக்­கல் மாவட்­டத்­தில் ஒரு­நாள் முழு கடை­ய­டைப்பு போராட்­டம் நடத்த உள்­ள­தாக தமிழ்­நாடு வணி­கர் சங்­கங்­க­ளின் பேர­மைப்­பின் நாமக்­கல் மாவட்­டச் செய­லா­ளர் ஜெய­கு­மார் வெள்ளை யன் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, போலி­சா­ரால் விசா­ர­ணைக்கு அழைத்­துச் செல்­லப் பட்டு உயி­ரி­ழந்த ஜெய­ராஜ், அவ­ரது மகன் பெனிக்ஸ் குடும்­பத்­தி­ன­ருக்கு இரங்­கல் தெரி­வித்­துள்ள முதல்­வர் பழ­னி­சாமி, இரு­வ­ருக்­கும் தலா ரூ 10 லட்­சம் நிவா­ர­ணம் வழங்­கப்­படும் என அறி­வித்­துள்­ளார். ஜெய­ராஜ் குடும்­பத்­தில் ஒரு­வ­ருக்கு அரசு வேலை வழங்­கப்­படும் என்­றும் கூறினார்.

வணி­கர்­க­ளான த‌ந்தை மகன் சிறை­யில் உயி­ரி­ழந்த விவ­கா­ரத்தை விசா­ரித்த உயர்­நீ­தி­மன்ற மதுரை கிளை, கொரோ­னா­வால் மக்­கள் கடு­மை­யான பாதிப்பை சந்­தித்­து வரும் சூழ­லில் காவல்­து­றை­யி­னர் இது­போன்று கடு­மை­யாக நடந்­து­ கொள்­ளக்கூடாது என காவல்­துறை­யி­னரைக் கண்­டித்­துள்­ளது.