மதுரை: மதுரையில் நேற்று ஒரே நாளில் 170 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,449ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இங்குள்ள ராஜாஜி அரசு மருத் துவ வளாகத்தில் உள்ள 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 10 பேர் நேற்று அதிகாலை முதல் அடுத்தடுத்து உயிர் இழந்தது பெரும் அதிர்ச்சி தந்தது.

