சுகாதாரச் செயலர்: கேரளா போல் தமிழகத்திலும் சித்த மருத்துவம் வழி குணப்படுத்தலாம்

சுகாதாரச் செயலர்: கேரளா போல் தமிழகத்திலும் சித்த மருத்துவம் வழி குணப்படுத்தலாம்

2 mins read
e3e38780-d80a-480c-abe7-0402c23f31d7
படம்: ஏஎப்பி - அருண் சங்கர் -

சென்னை: தமி­ழ­கத்­தில் வெள்ளி இர­வு­டன் ஒரே­நா­ளில் 3,645 பேரை கொரோனா கிரு­மித்ெ­தாற்று பாதித்­தது. இவர்­க­ளு­டன் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 75,000ஐ நெருங்­கி­யுள்­ளது. ஒரே நாளில் கர்ப்­பி­ணிப் பெண் ஒரு­வர் உள்­பட 46 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

தமி­ழ­கத்­தில் நாள்­தோ­றும் புதிய உச்­சம் தொடும் கிருமி பாதிப்பு தொடர்­பாக தமி­ழக சுகா­தா­ரத்­துறை சார்­பில் வெளி­யி­டப்­பட்ட செய்­திக்­கு­றிப்­பில், "தமி­ழ­கத்­தில் 3,523 பேர், வெளி­நா­டு­களில் இருந்து வந்த 26 பேர், வெளி­மா­நி­லங்­களில் இருந்து வந்த 96 பேர் என மொத்­தம் 3,645 பேருக்கு கிருமி பாதிப்பு இருப்­பது கண்­ட­றி­யப்­பட்டுள்­ளது.

"இதில் 2,211 ஆண்­களும் 1,434 பெண்­களும் அடங்­கு­வர். இதில் 12 வய­துக்கு உட்­பட்ட 152 குழந்தை களும் உள்­ள­னர். தற்­போது தமிழ கத்­தில் கொரோனா பாதிப்பு 74,622ஆக அதி­க­ரித்­துள்­ளது.

"கிரு­மிப் பர­வ­லால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 957ஆக அதி­க­ரித்­துள்­ளது. அத்து டன் 1,358 பேர் மீண்­ட­னர். இது­வ­ரை­யில் 41,357 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்­ள­னர். 32,305 பேர் சிகிச்சை பெற்று வரு கின்­ற­னர்.

"சென்­னை­யில் கிரு­மித்­தொற் றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எண் ணிக்கை 49,690ஆக அதி­க­ரித் துள்­ளது. இங்கு 28,823 பேர் இத் தொற்­றில் இருந்து மீண்டு வீடு திரும்­பி­யுள்­ள­னர். தற்­போ­தைய நிலை­யில் 20,136 பேர் மருத்­துவ மனை­யில் சிகிச்சை பெற்று வரு கின்­ற­னர். சென்­னை­யில் இது­வரை பலி­யா­னோர் எண்­ணிக்கை 730 ஆக அதி­க­ரித்­துள்­ளது," என்று கூறப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் சென்னை வியா­சர்­பா­டி­யில் உள்ள டாக்­டர். அம்­பேத்­கர் அரசு கலைக் கல்­லூரி வளா­கத்­தில் கொரோ­னா­விற்கு சித்த மருத்­துவ சிகிச்சை தொடங்­கப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து அரசு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யின்­படி, அங்கு 12 அனு­ப­வ­மிக்க மருத்­து­வர்­கள் கொரோனா நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளித்­து­வ­ரு­கின்­ற­னர்.

நோயா­ளி­க­ளுக்கு கப­சு­ரக் குடி­நீர், ஆடா­தொடை மணப்­பாகு, தனி­சதீ சூர­ணம், பிர­மா­னந்த பைர­வம் போன்ற சித்த மருந்­து­களும் கொடுக்­கப்­ப­டு­கின்­றன. மேலும் அவர்­க­ளுக்கு மூச்­சுப்­ப­யிற்­சி­யும் சித்தா முறை­யில் யோகா பயிற்­சி­யும் அளிக்­கப்­ப­டு­கின்­றன.

சுகா­தா­ரத்­துறை செய­லர் ஜே. ராதா­கி­ருஷ்­ணன் பேசு­கை­யில், "கேர­ளா­வில் சித்த மருத்­துவ முறை யைக் கடைப்­பி­டித்து கொரோனா பாதிப்பு குறைந்­துள்­ள­தைப் போலவே, தற்­போது தமிழ்­நாட்­டி­லும் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கிறது.

"இத­னால் கொரோனா நோயா­ளி­க­ளுக்கு இன்­னும் நல்ல முறை­யில் சிகிச்சை அளிக்­க­மு­டி­யும். மிக விரை­வா­கவே அவர்­களை குணப்­ப­டுத்­த­மு­டி­யும் என நம்­பு­கி­றோம்," என்று அவர் கூறி­யுள்­ளார்.