மதுரை: உயிர் எழுத்துகள் 12, மெய் எழுத்துகள் 18, உயிர் மெய் எழுத்து கள் 216, ஆய்த எழுத்து 1 என ஆகமொத்தம் 247 தமிழ் எழுத்து களையும் மையமாக வைத்து மண்டலா ஓவியத்தை 100 அடி நீளத்துக்கு வரைந்து சாதனை புரிந்துள்ளார் மதுரை மாணவர் ஒருவர்.
மண்டலா ஓவியம் என்பது நான்காம் நூற்றாண்டு காலத்து மிகப் பழமையான ஓவியம். இவை கணித சாஸ்திரங்களையும் தியான நுணுக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு வரையக்கூடியவை.
இந்த ஓவியங்கள் வரைவதால் மன அழுத்தம் குறையும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அ,ஆ,இ உயிர் எழுத்துகளில் தொடங்கி தமிழின் 247 எழுத்துகளையும் தனது ஓவி யத்தில் வடித்துள்ளார் மதுரை, புது விளாங்குடியைச் சேர்ந்த 16 வயது ஹரீஷ் சக்தி என்ற மாணவர்.
இந்த ஓவியத்தில் திருக்குறள், ஆத்திசூடியும் இடம்பெற்றுள்ளன.
பத்தாம் வகுப்பு முடித்துள்ள ஹரீஷ் சக்தி தனது கொரோனா விடுமுறையைப் பயனுள்ளதாகக் கழிக்க இந்த மண்டலா ஓவியத்தை இணையம் வழி பயின்றுள்ளார்.
இந்த ஓவியத்தை சாதனையாக்கும் வகையில், இந்திய சாதனைப் புத்தக அமைப்பின் அனுமதியைப் பெற்று, கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் ஓவிய முயற்சியைத் தொடங்கினார். கடந்த மூன்று நாட்களாக தினமும் பத்து மணி நேரமாக ஓவியத்தை வரைந்து வந்தவர் வெள்ளி இரவு இந்த சாதனை முயற்சியை முடித்துள்ளார்.
சாதனை புத்தக நிறுவனம் வழங்கிய கால அவகாசத்துக்கு முன்பே கொடுக்கப்பட்ட அளவுக்கும் கூடு தலாக அதாவது 101 அடி நீளத்துக்கு ஓவியம் வரைந்துள்ளாா்.

