உளுந்தூர்பேட்டை: சாத்தான் குளம் சம்பவம் போல் ஆகிவிடக் கூடாது என்று பயந்த பெண் ஒருவர், உளுந்தூர் பேட்டை காவல்நிலையம் முன்பு நடுசாலையில் குழந்தைகளுடன் அமர்ந்து தனது அண்ணன் ஜானகி ராமனை உடனே விடுவிக்க வேண்டும் என்று முழக்கமிட்டு, போராட்டம் நடத்தினார்.
இதையடுத்து, அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய போலி சார், பெண்ணை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே கூவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளிகந்தன். இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், கணவனும் மனைவியும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த வள்ளிகந்தன் அபிராமியைத் தாக்கியுள் ளார். அபிராமியின் சகோதரர்கள் இருவர் வள்ளிகந்தனிடம் சென்று இதுகுறித்து கேட்க, அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரை அடுத்து ஜானகிராமனைப் போலிசார் பிடித்துச் சென்று விசாரித்தனர்.