சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு புதிதாக தலைமை காவலர், சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 27 காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வருவாய்த் துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மேலும் தடயவியல் துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்குச் சென்று அங்குள்ள தடயங்களைச் சேகரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும் 2 காவல் உதவி ஆய்வாளர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.