தஞ்சாவூரில் 15 வயது சிறுமி கர்ப்பமாகக் காரணமான தாத்தாவும், அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஒரத்தநாட்டைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்ததால், அவருடைய 2 மகள்களும் சித்தி வீட்டில் வளர்ந்து வந்தனர். ஆனால், மூத்த மகள் மட்டும் அவரது தந்தையுடன் வந்து வசித்துள்ளார்.
அப்போது, மகளுக்கு இளங்கோவன் பாலியல் தொல்லை தந்ததால், அக்கம் பக்கத்தினர் அந்த சிறுமியை, தாத்தா மாரிமுத்து வீட்டில் கொண்டுபோய் விட்டனர்.
ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த அந்தச் சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்படவே மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டபோது அந்தச் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்துள்ளது.
இது தொடர்பாக சைல்டு லைன் அமைப்பினர் மூலம் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது.
அவர்கள் சிறுமியிடம் விசாரித்ததில் தாத்தா மாரிமுத்து மற்றும் இளங்கோவன் செய்த கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து அவ்விருவரையும், போக்சோ சட்டத்தின்கீழ் போலிசார் கைது செய்தனர்.