சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கர்ப்பமாக்கிய தாத்தா, தந்தை கைது

தஞ்சாவூரில் 15 வயது சிறுமி கர்ப்பமாகக் காரணமான தாத்தாவும், அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

ஒரத்தநாட்டைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்ததால், அவருடைய 2 மகள்களும் சித்தி வீட்டில் வளர்ந்து வந்தனர். ஆனால், மூத்த மகள் மட்டும் அவரது தந்தையுடன் வந்து வசித்துள்ளார்.

அப்போது, மகளுக்கு இளங்கோவன் பாலியல் தொல்லை தந்ததால், அக்கம் பக்கத்தினர் அந்த சிறுமியை, தாத்தா மாரிமுத்து வீட்டில் கொண்டுபோய் விட்டனர்.

ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த அந்தச் சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்படவே மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டபோது அந்தச் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்துள்ளது.

இது தொடர்பாக சைல்டு லைன் அமைப்பினர் மூலம் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது.

அவர்கள் சிறுமியிடம் விசாரித்ததில் தாத்தா மாரிமுத்து மற்றும் இளங்கோவன் செய்த கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து அவ்விருவரையும், போக்சோ சட்டத்தின்கீழ் போலிசார் கைது செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!