கோவை: கோவை தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு கொவிட் 19 கிருமித்தொற்று இருப்பது உறுதியாகி யுள்ளது. அவர் தற்போது இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே, அவருடைய மகள், மருமகன், பேத்தி ஆகியோர் மதுரை சென்று திரும்பிய நிலையில், அவர்க ளுக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தற்போது எம்எல்ஏவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற் கெனவே திமுகவைச் சேர்ந்த ஜெ.அன்பழகன் கிருமித்தொற்றால் பலியானார். இதைத்தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், செஞ்சி மஸ்தான், ஆர்.டி.அரசு, அதிமுகவைச் சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பரமக்குடி, உளுந்தூர் பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏக்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

