சென்னை: கொவிட்-19 கிருமிப் பரவலால் பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஆங்காங்கே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கெனவே திமுகவைச் சேர்ந்த ஜெ.அன்பழகன் கிருமித்தொற்றால் பலியானார். இதைத்தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், செஞ்சி மஸ்தான், ஆர்.டி.அரசு, அதிமுகவைச் சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பழனி, சதன் பிரபாகரன், குமரகுரு, அம்மன் அர்ச்சுணன் உள்ளிட்ட எம்எல்ஏக்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

