சென்னை: கொவிட்-19 கிருமிப் பரவல் பாதிப்பு சென்னை மாநகரில் வழக்கத்தைவிடவும் சற்றே மட்டுப்பட்டுள்ளதாக முன்னதாக தகவல் வெளிவந்த நிலையில், இப்போது தமிழகத்திலும் இந்த பாதிப்பு மட்டுப்படத் தொடங்கியுள்ளது.
இதனால் மக்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.
நேற்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 33,518 பேருக்கு பரிசோதனை செய்ததில் 3,827 பேருக்கு தொற்று இருந்தது.
கடந்த ஜூன் 28ஆம் தேதி நிலவரப்படி, கிருமிப் பரவலால் 3,940 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து இப்பாதிப்பு தொடர்ந்து 4,000க்கும் மேல் ஏறுமுகத்தில் இருந்து வந்தது.
இந்நிலையில், மாநிலத்தில் எட்டு நாட்களுக்குப் பின்னர் கொவிட்-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இறங்குமுகத்துக்கு வந்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 114,978 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுகாலை வரை ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,571 ஆக கூடியுள்ளது.
“தமிழகத்தில் ஒரேநாளில் 3,793 பேர் குணம் அடைந்தனர். இவர்களு டன் இதுவரை 66,571 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 46,833 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
“சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,017 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 1,082 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,747 பேர் பாதிக்கப்பட்டனர். இங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 44,882 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதற்கிடையே, “ஊரடங்கு தளர்வுகளை சென்னை மக்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பிறர் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, உங்க ளுக்காகவும் முகக்கவசம் அணிந்து, சமூக விலகலைக் கடைப்பிடியுங் கள். மக்கள் ஒத்துழைப்பின்றி கொரோனா உடனான போரை எந்த அரசாலும் வெல்ல இயலாது,” என உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.