வேலூர்: தூங்கிக்கொண்டிருந்த 15 வயது சிறுமியின் கழுத்தில் வலுக்கட்டாயமாக தாலி கட்ட வைத்த பெற்றோரிடம் கட்டாயத் திருமணம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரில் உள்ள விருத்தம்பட்டு காவல்நிலையத்துக்கு தனியாக வந்த சிறுமி, “எனக்கு திருமணம் இப்போதைக்கு வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் எனது பெற்றோர் எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாமல் நான் தூங்கிக்கொண்டிருந்தபோது என் கையைப் பிடித்துக்கொண்டு என் கழுத்தில் வலுக்கட்டாயமாக தாலி கட்ட வைத்தனர்,” என பெற்றோர் மீது புகார் அளித்தார்.
இப்புகாரைக் கேட்டு அதிர்ந்த போலிசார், சமூக நலத் துறை அதிகாரிகளை அழைத்து சிறுமியை காப்பகத்தில் சேர்த்தனர்.