சென்னை: “கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டேன். தற்போது ஓய்வில் உள்ளேன், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன்,” என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன் எனது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுவதை நம்பவேண்டாம் என அவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அன்பழகன் தனி அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விரைந்து குணமடைந்து வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.