கடலூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாகத் தமிழகத்தில் முதல்முறையாக கடலூர் போலிஸ் அலுவலகத்தில் தானியங்கி உடல்வெப்ப பரிசோதனை செய்யும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவியின் முன் நின்றால் உடல் வெப்பநிலைையக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டை எஸ்பி ஸ்ரீஅபிநவ் துவக்கி வைத்தார். இதில், 37.2 டிகிரி செல்சியஸ் டிகிரிக்கு மேல் உடல் வெப்பம் இருந்தால் எச்சரிக்கை ஒலி எழுப்பும். மேலும் அவர்களைப் படம் எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிவிடும். அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவர். இந்தக் கருவியை கடலூரில் பணிபுரியும் போலிஸ் தொழில்நுட்பப் பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உருவாக்கி உள்ளார். படம்: ஊடகம்
தமிழகத்தில் முதல்முறையாக தானியங்கி வெப்ப சோதனை
1 mins read
படம்: ஊடகம் -

