ஜெயக்குமார்: கள்ளத் துப்பாக்கியால் சுட்டதை ஏற்க முடியாது எம்எல்ஏ இதயவர்மன் உள்பட 12 பேர் கைது

ஜெயக்குமார்: கள்ளத் துப்பாக்கியால் சுட்டதை ஏற்க முடியாது எம்எல்ஏ இதயவர்மன் உள்பட 12 பேர் கைது

2 mins read
c6ecca5d-ff95-4137-a56d-af7196ada6c3
தேடப்பட்டு வந்த எம்எல்ஏ இதயவர்மன், தனிப்படை போலிசாரால் சென்னை மேடவாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்டார். படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

திருப்­போ­ரூர்: திருப்­போ­ரூர் அருகே நிலத்­த­க­ராறு கார­ண­மாக நடத்­தப் பட்ட துப்­பாக்­கிச் சூடு சம்­ப­வத்தின் தொடர்­பில், திமுக எல்­எல்ஏ இத­ய­வர்­மன் உள்­பட 12 பேரை தனிப்­படை போலி­சார் கைது செய்துள்­ள­னர்.

"திமுக எம்­எல்ஏ இத­ய­வர்­மன் தரப்­பில் 11 பேரும் அவ­ருக்கு எதி­ராக புகார் கொடுத்­த­வ­ரின் தரப்­பில் ஒரு­வ­ரும் கைது செய்­யப்­பட் டுள்­ள­னர்," என்று மாமல்­ல­பு­ரம் துணை போலிஸ் அதி­காரி சுந்­த­ர­ வ­த­னம் தெரி­வித்­துள்­ளார்.

திருப்­போ­ரூரை அடுத்த செங்­காடு கிரா­மம் அருகே இரு தரப்­பினருக்கு இடையே சொத்­துப் பிரச்­சினையால் தகராறு ஏற்பட்டது.

அப்போது துப்­பாக்­கி­யால் சுடப்­பட்டதில் ஒருவா் காய­ம­டைந்­தார்.

இந்த துப்­பாக்­கிச்­சூடு சம்­ப­வம் குறித்து இரு­த­ரப்­பி­ன­ருமே திருப்­போரூா் காவல் நிலை­யத்­தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், திமுக எம்­எல்ஏ, அவ­ரது தந்தை மீது 5 பிரி­வு­க­ளின் கீழ் வழக்­குப் பதிவானது.

இதை­ய­றிந்த இத­ய­வா்­ம­னும் அவ­ரது தந்தை லட்­சு­மி­ப­தி­யும் தலை­ம­றை­வா­கினா். அவர்கள் இரு­ வ­ரை­யும் தனிப்­படை போலி­சார் தேடி­வந்­தனா்.

இந்­நி­லை­யில், எம்­எல்ஏ இதய வா்மனை சென்னை மேட­வாக்­கம் பகு­தி­யில் வைத்து தனிப்­படை போலிசார் கைது செய்­தனா்.

அத்துடன் அவ­ரது தம்பி நிா்மல், மைத்­துனா் வசந்த், ஓட்­டுநா் கந்­தன், செங்­காடு பகு­தி­யைச் சோ்ந்த ரமேஷ், வாசு­தே­வன், யுவ­ராஜ் ஆகிய அறுவரை­யும் கைது செய்த போலிசார், அவர்களிடம் 5 மணி­ நே­ரத்­துக்­கும் மேலாக விசாரணை நடத்­தினா்.

அவா்க­ளின் வாக்­கு­மூ­லங்­களைப் பதிவு செய்து, அவா்களை செங்­கல்­பட்டு நீதி­மன்ற நீதி­பதி காயத்­ரி­தேவி முன்­னி­லை­யில் முன்­னி­லைப்­ப­டுத்தி புழல் சிறை­யில் அடைத்­தனா்.

இத­னி­டையே, துப்­பாக்­கிச்­சூட்­டில் காய­ம­டைந்து தனியாா் மருத்­துவமனை­யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இம­யம் சேகா், மருத்­து­வ­ம­னை­யில் இருந்து தப்­பிச்சென்று விட்ட­தா­கக் கூறப் படு­கிறது. அவரை போலிசார் தேடி வரு­கின்­றனா்.

இந்நிலையில், திமுக எம்­எல்ஏ இத­ய­வர்­மன் கைது செய்­யப்­பட்ட விவ­கா­ரத்­தில் சட்­டம் தனது கடமை யைச் செய்­துள்­ள­தாக தமி­ழக மீன்­வளத்­துறை அமைச்­சர் ஜெயக்­குமார் தெரி­வித்­துள்­ளார்.

செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த அவர், "திமு­க­வில் தற்­போது துப்­பாக்கி கலா­சா­ரம் தலை­தூக்கி உள்­ளது. இதற்கு திருப்­போரூா் திமுக சட்­டப்­பே­ரவை உறுப்­பினா் இதய வா்மனின் செயல் எடுத்­துக் காட்­டாக உள்­ளது. ஆட்­சி­யில் இல்­லாத நிலை­யில் கூட திமு­க­வினா் செயல்­பாடு இப்­படி உள்­ள­தென்­றால் ஒரு­வேளை இவா்கள் ஆட்­சிக்கு வந்து­விட்­டால், மக்­க­ளின் நிலைமை என்னவாகும்?" என்று கேள்வி எழுப்பினார்.

"நானும் உரிய உரி­மத்­து­டன் இரண்டு துப்­பாக்­கி­களை வைத்­துள்­ளேன்," என்று தெரி­வித்த ஜெயக்­கு­மார், "சட்­டத்தை கையில் எடுத்­துக்கொண்டு, ஒரு சட்­ட­மன்ற உறுப்பினர் கள்­ளத்­துப்­பாக்­கி­யால் சுட்­டதை ஏற்­க­மு­டி­யாது," என்­றும் தெரி­வித்­தார்.