சாலையில் தாறுமாறாக ஓடி வீட்டுக்குள் புகுந்த ஆம்புலன்ஸ்

கரூர்-திருச்சி சாலையில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று படுவேகத்தில் தாறுமாறாக ஓடியது. அதனைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

கட்டுப்பாட்டை இழந்து ஓடிய ஆம்புலன்ஸ், பி.வெள்ளாளப்பட்டி என்னும் ஊர் அருகே சாலை ஓரமாக இருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் புகுந்தது.

கூரை வீட்டை உடைத்துக்கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கம்புகள் மேல் சென்று அந்தரத்தில் நின்றது.

வீட்டுக்குள் யாரும் இல்லாததால் அங்கு வசித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

பொதுமக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்குள் சிக்கியிருந்த இரு இளையர்களை மீட்டனர்.

தகவலின் பேரில் விரைந்து சென்ற பசுபதிபாளையம் போலிசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

மீட்கப்பட்டவர்களின் பெயர் ஹரிஷ், ராகவன் என்றும் தலைக்கேறிய போதையில் அவர்கள் இருந்ததும் தெரியவந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!