மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 8,000ஐ தாண்டியது.
இன்று 18ஆம் தேதி காலை நிலவரப்படி, மதுரை மாவட்டத்தில் மேலும் 245 பேருக்கு கொரோனா கிருமி இருப்பது உறுதியானதால் மொத்த பாதிப்பு 8,103 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 138 பேர் உயிரிழந்துள்ள நிலை யில், 4,677 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை, நெல்லை, விருது நகர், தென்காசி, கன்னியா குமரி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா கிருமி பாதிப்பு அதிகரித்து வருவதால் இம் மாவட்டங் களில் கொரோனா தடுப்புப் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.