தமிழகத்தில் 160,907 பேர் பாதிப்பு; இவர்களில் சென்னையில் மட்டும் 83,377 பேருக்கு தொற்று

தமிழகத்தில் 160,907 பேர் பாதிப்பு; இவர்களில் சென்னையில் மட்டும் 83,377 பேருக்கு தொற்று

2 mins read
47de03a7-61c1-4a45-869a-6780ae35d2f0
சென்னை கொசப்பேட்டை பகுதியில் கைவினைக் கலைஞர்கள், கண்ணன் சிலைகளை உருவாக்கி வண்ணம்பூசி மெருகூட்டுகின்றனர். ஆகஸ்ட் 12ஆம் தேதி, இந்துக் கடவுளான கண்ணனுக்குப் பிறந்த நாள் (கிரு‌ஷ்ண ஜெயந்தி) அந்த வழிபாட்டுக் கொண்டாட்டத்தையொட்டி இதுபோன்ற கைவினைக் கலைக்கூடங்களில் வெண்ணெய் உண்ணும் கண்ணன், தொட்டில் கண்ணன், கோகுலக் கண்ணன், புல்லாங்குழல் கண்ணன், ராதா கண்ணன் என கண்களைக் கவரும் பலவகை கண்ணன் சிலைகள் செய்யப்படும். படம்: ஏஎப்பி, அருண் சங்கர். -

சென்னை: சென்­னை­யில் 80% கொரோனா நோயா­ளி­கள் குண­ம­டைந்­து­விட்­ட­தாக சென்னை மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் தக­வல் வெளி­யிட்­டுள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை தின­மும் உயர்ந்து வருகிறது. அதே­போல் மற்­றொரு புறம் குண­ம­டை­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் கணி­ச­மாக உயர்ந்­துள்­ளது.

இருப்­பி­னும், வெள்­ளிக்­கி­ழமை ஒரே நாளில் கொரோனா கிரு­மித் தொற்­றால் 79 பேர் இறந்­துள்­ளது தமி­ழக மக்­க­ளி­டம் அதிர்ச்­சி­யைக் கூட்­டி­யுள்­ளது.

தமி­ழ­கத்­தில் வெள்­ளிக்­கி­ழமை ஒரே நாளில் 4,538 புதிய கொவிட்-19 தொற்று பதி­வா­னது. இவர்­க­ளை­யும் சேர்த்து மாநி­லத்­தில் 1,60,907 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

குண­ம­டைந்­த­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 110,807ஆக அதி­க­ரித்துள்­ளது. இது­வரை 2,315 பேர் உயி­ரி­ழந்­துள்ளனர்.

கிரு­மி­யால் பாதிக்­கப்­ப­டுப­வர்­களின் எண்­ணிக்கை சென்­னை­யில் குறைந்து வரும் நிலை­யில், தென் மாவட்­டங்­களில் இப்­பா­திப்பு உயர்ந்து வரு­கிறது.

இப்­பா­திப்பு குறித்து சென்னை மாந­க­ராட்சி வெளி­யிட்­டுள்ள அறிக் கையில், "சென்­னை­யில் இது­வரை 83,377 பேர் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அதில் 80% நோயா­ளி­கள் பூரண குண­ம­டைந்து வீடு திரும்பி உள்­ள­னர்.

"அதி­க­பட்­ச­மாக தண்­டை­யார்­பேட்டை மண்­ட­லத்­தில் 88%, ராய­பு­ரத்­தில் 87%, மண­லி­யில் 85%, பெருங்­கு­டி­யில் 83% குணம் அடைந்­துள்­ள­னர்.

"இறப்பு விகி­தத்தை பொறுத்த வரை 1.63% ஆக உள்­ளது," என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, தூத்­துக்­கு­டி­யில் சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு கையில், பிளாஸ்மா தானம் செய்ய மக்­கள் முன்­வர வேண்­டும் என வேண்­டு­கோள் விடுத்­தார்.

கொரோனா உயர் சிகிச்­சைக்கு ரூ.76.5 கோடி செல­வில் அதி­நவீன உயர் ஓட்ட ஆக்­சி­ஜன் கரு­வி­கள் வாங்­கப்­பட்டு உள்­ள­தா­க­வும் அவர் மேலும் தெரி­வித்­தார்.