கோவை: கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனைக் களங்கப்படுத்த முடியாது," என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, கோவையில் பெரியார் சிலை மீது காவி நிற சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி பெரியார் அமைப்பினரும் திமுகவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் சிதம்பரத்திலும் திராவிடர் கழகம், திமுக, விடுத லைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 'கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல்' கந்தசஷ்டி கவசத்தை அவமதித்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே கோவை சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது காவி சாயத்தை வீசினேன் என்று காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள அருண்கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அருண்கிருஷ்ணனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

