தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2,481ஆக அதிகரிப்பு: சிகிச்சையில் 50 ஆயிரம் பேர்

1 mins read
fee23cc6-5846-4648-98a1-665f594877ab
தமிழகத்தில் கொரோனா தொற்றுவதும் மரண எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது எப்போது முடிவுக்கு வரும் என்பது அறியாது பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இணையம் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இன்டர்நெட், கணினி வசதியைக் கொண்டிராத மாணவர்களுக்காக தமிழ் நாடு அரசு கல்வி தொலைக்காட்சி என்ற ஒளிவழியைத் தொடங்கியுள்ளது. அதன் மூலம் இரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்கள் பாடத்தைப் பயிலாம். படம்: ஏஎப்பி, அருண் சங்கர் -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மி­த்­தொற்­றால் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை 2,481ஆக அதி­கரித்­துள்­ளது.

இது தொடர்­பாக மாநில சுகாதாரத்­துறை வெளி­யிட்ட அறிக்­கை­யில், கொவிட்-19 பாதிப்பு உள்­ள­வர்­க­ளின் ஒட்­டு­மொத்த எண்­ணிக்கை 1.70 லட்­சத்­தைக் கடந்­துள்­ள­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

திங்­கட்­கி­ழமை ஒரே நாளில் 4,979 பேருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்ட நிலை­யில், அண்­மைய சில தினங்­க­ளாக மாநிலத்­தில் குறைந்­த­பட்­சம் தினமும் ஐம்பது பேர் பலி­யாகி வரு­கின்­ற­னர்.

"தமி­ழ­கத்­தில் இப்­போது 112 கொரோனா கிரு­மிப் பரி­சோ­தனை மையங்­கள் செயல்­ப­டு­கின்­றன. நேற்று முன்­தி­னம் 4 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் கொவிட்-19 நோயி­லி­ருந்து முழு­மை­யா­கக் குண­ம­டைந்து வீடு திரும்­பி­யுள்­ளனர்.

இதன் மூலம் குண­ம­டைந்­த­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 1 லட்­சத்து 17 ஆயி­ரத்து 915ஆக உயர்ந்­துள்­ளது.

தற்­போது மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை 50,294 என்­றும் சுகாதா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

இதற்கிடையே சென்னையில் கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக சென்னையின் சில முக்கிய பகுதிகள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.