சுகாதார செயலர் குடும்பத்தில் நால்வருக்கு கொவிட்-19 பாதிப்பு

சுகாதார செயலர் குடும்பத்தில் நால்வருக்கு கொவிட்-19 பாதிப்பு

1 mins read
2692a822-0018-4a63-aec0-30858824a050
தமி­ழக சுகா­தா­ரத் துறைச் செய­லர் ராதா­கி­ருஷ்­ணனின் குடும்­பத்தினர். படம்: இணையம் -

சென்னை: தமி­ழக சுகா­தா­ரத் துறைச் செய­லர் ராதா­கி­ருஷ்­ணனின் குடும்­பத்­தா­ருக்­கு (படம்) கிரு­மித் தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அவரது மனைவி, மகன் உள்­ளிட்ட 4 பேருக்கு கொவிட்-19 நோய் இருப்பது உறுதி­யாகி உள்­ளது.

கொரோனா கிரு­மித் தொற்றுப் பர­வ­லால் சாமா­னி­யர்­கள் மட்டு­மல்­லா­மல் உயர்­பொ­றுப்­பில் இருப்­ப­வர்­களும் பாதிக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

கிரு­மித் தொற்­றுப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு முழு­வீச்­சில் செயல்­பட்டு வரு­கி­றார் சுகா­தா­ரத்­துறை செய­ல­ரான ராதா­கி­ருஷ்­ணன்.

இந்­நி­லை­யில் அவ­ரது மனைவி கிருத்­திகா, மகன் அர­விந்த், மாமனார் நட­ரா­ஜன் மற்­றும் மாமியார் என நான்கு பேருக்கு கிரு­மித் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

நால்­வ­ரும் அரசு மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக தமது டுவிட்­டர் பக்­கத்­தில் குறிப்­பிட்­டுள்ள ராதா­கி­ருஷ்­ணன், தமக்கு பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை என உறுதி செய்­துள்­ளார்.

மேலும் நெருங்­கிய உற­வி­னர் மூல­மா­கவே தமது குடும்­பத்­தா­ருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே கொவிட்-19 நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த தமிழக அமைச்­சர்­கள் தங்­க­மணி, கே.பி. அன்­ப­ழ­கன் ஆகிய இரு­வ­ரும் முழு­மை­யா­கக் குண­ம­டைந்து வீடு திரும்பி உள்­ள­னர்.

இவ்­விரு அமைச்­சர்­களும் மாநிலத்­தின் பல்­வேறு பகு­தி­களில் கொரோனா விவ­கா­ரத்­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிவா­ரண உத­வி­கள் வழங்­கும் நிகழ்­வு­களில் பங்­கேற்­ற­னர்.

இந்­நி­லை­யில் அன்­ப­ழ­க­னுக்கு கடந்­த­மாத இறு­தி­யில் காய்ச்­சல் ஏற்­பட்­டது. எனவே மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

இதே­போல் அமைச்­சர் தங்க­ம­ணி­யும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு சென்னை மருத்துவ­ம­னை­யில் சிகிச்சை பெற்­றார்.

இந்­நி­லை­யில் இரு அமைச்­சர்­களும் குண­ம­டைந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர்.