கொரோனாவில் இருந்து மீண்ட தம்பதியர்: தடபுடல் வரவேற்பு அளித்த கிராம மக்கள்

கொரோனாவில் இருந்து மீண்ட தம்பதியர்: தடபுடல் வரவேற்பு அளித்த கிராம மக்கள்

1 mins read
e39dea34-5be6-46b9-b4fb-4d1ef1c0f811
தம்பதியர்க்கு அளிக்கப்பட்ட வரவேற்பு. படம்: தகவல் ஊடகம் -

புதுக்­கோட்டை: கொவிட்-19 நோயா­ளி­க­ளைப் பார்த்­தாலே பல­ரும் ஓட்­ட­மெ­டுக்­கும் நிலை­யில் அந்­நோ­யின் தாக்­கத்­தி­லி­ருந்து முழு­மை­யா­கக் குண­ம­டைந்து வீடு திரும்­பிய தம்­ப­தி­யர்க்கு புதுக்­கோட்­டை­யில் உள்ள கிராம மக்­கள் தட­பு­ட­லாக வர­வேற்பு அளித்­த­னர்.

அறந்­தாங்கி அருகே உள்ள நாகுடி கிரா­மத்­தைச் சேர்ந்த ஜோதி­டர் ஒரு­வர் சில தினங்­க­ளுக்கு முன்பு கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டார்.

இதை­ய­டுத்து 55 வய­தான அவர் புதுக்­கோட்டை அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

மருத்­து­வப் பரி­சோ­த­னை­யின்­போது அவ­ரது மனை­விக்­கும் கிரு­மி தொற்­றி­யது தெரி­ய­வந்­தது. இதனால் இரு­வ­ரும் சிகிச்சை பெற்று வந்­த­னர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் சிகிச்சையில் குணமடைந்து ஊர் திரும்பினர். இதையறிந்த நாகுடி பகுதி மக்கள் பலர் ஒன்றாகத் திரண்டு இருவருக்கும் மேளதாளத்துடன் வரவேற்பு அளித்து மாலை அணிவித்தனர். இதனால் அத்தம்பதியர் நெகிழ்ந்து போயினர்.