கோழி மேய்ந்ததால் தகராறு: அண்டை வீட்டார் சண்டையில் ஒருவர் உயிரிழப்பு

கோழி மேய்ந்ததால் தகராறு: அண்டை வீட்டார் சண்டையில் ஒருவர் உயிரிழப்பு

1 mins read
58cc5710-78e4-4b14-984e-d450e7044931
-

சென்னை: கோழி மேய்ந்­தது தொடர்­பாக அண்டை வீட்­டா­ரி­டையே மூண்ட சண்­டை­யில் ஒரு­வர் கொல்­லப்­பட்­ட­து­டன், இச்­சம்­ப­வம் தொடர்­பில் ஒரு தம்­ப­தி­யர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

சென்னை ஆவ­டியை அடுத்துள்ள திரு­முல்­லை­வா­யல் ஆரிக்­கம்­பேடு அம்­மன் கோயில் தெரு­வைச் சேர்ந்­த­வர் சசி­கு­மார். இவர் தனது மக­னின் விருப்­பத்­துக்­காக, மூன்று கோழி­களை கடந்த வாரம் வாங்­கி­யுள்­ளார்.

சம்­ப­வத்­தன்று அண்டை வீடான அன்­ப­ழ­க­னின் வீட்­டுக்­குள் அந்­தக் கோழி­கள் சென்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அத­னை­ய­டுத்து, அன்­ப­ழ­க­னின் மனைவி அழ­கு­மீனா அந்­தக் கோழி­க­ளைக் கல்­லால் அடித்து விரட்­டி­னா­ராம்.

அத­னைப் பார்த்த சசி­கு­மா­ரின் மனைவி துர்­கா­தேவி, அழகு மீனா இடையே வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. அப்­போது மனை­வி­க­ளுக்கு ஆத­ர­வாக சசி­கு­மா­ரும் அன்­ப­ழ­க­னும் கோதா­வில் குதித்­த­னர்.

தக­ராறு முற்றி கைக­லப்­பானதில், அன்­ப­ழ­கன் குடும்­பத்­தி­னர் சசி­கு­மா­ரைக் கீழே தள்­ளி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதில் தலை­யில் காய­முற்ற அவர் அசை­வின்­றிக் கிடந்­துள்­ளார். பின்­னர் அவர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக மருத்­து­வ­ம­னை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

சசி­கு­மா­ரின் சட­லத்­தைக் கைப்­பற்றி உடற்­கூறு ஆய்­வுக்கு போலி­சார் அனுப்பி வைத்­த­னர். சசிகுமாரை கொலை செய்த வழக்­கில் அன்­ப­ழ­கனை போலி­சார் கைது செய்­த­னர்.

எனி­னும் சசி­கு­மார் தரப்­பில் அளிக்­கப்­பட்ட புகா­ரின் அடிப்படை­யில் பின்­னர் அன்­ப­ழ­க­னின் மனைவி அழ­கு­மீ­னா­வும் கைதா­னார்.

இந்­தச் சம்­ப­வம் கார­ண­மாக சென்னை ஆவடி பகு­தி­யில் பரபரப்பு நில­வி­யது.