தமிழகம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,626; குணமடைந்தோர் எண்ணிக்கை 1.26 லட்சம்

தமிழகம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,626; குணமடைந்தோர் எண்ணிக்கை 1.26 லட்சம்

1 mins read
224adeb0-8717-4976-8543-1ce1d60f7ec8
மதுரையில் அதிமுக சார்பில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது. உணவு தயாரிக்கும் இடத்தை அமைச்சர் உதயகுமார் நேற்று முன்தினம் பார்வையிட்டார். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித் தொற்­றால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 2,626ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் புதி­தாக 4,965 பேருக்குக் கிருமி தொற்­றி­யது உறுதி­யா­னது. மேலும் அன்­றைய தினம் 75 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் தற்­போது தின­மும் 50 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தப்­பட்டு வரு­கிறது.

அதே­வே­ளை­யில் புதி­தாக நோய்­வாய்ப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து வரு­கிறது.

தற்­போது மாநி­லம் முழு­வ­தும் சுமார் 1.80 லட்­சம் பேர் கொரோனா கிரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இது­வரை சுமார் 19.56 லட்­சம் பேருக்கு கொவிட்-19 நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்­நி­லை­யில் கொவிட்-19 நோயி­லி­ருந்து குண­ம­டை­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து வரு­வ­தாக சுகா­தா­ரத் துறை வெளி­யிட்ட அறிக்கை தெரி­விக்­கிறது. நேற்று முன்­தி­னம் ஒரே­நா­ளில் சுமார் 5 ஆயி­ரம் பேர் குண­ம­டைந்­துள்­ள­னர்.

சென்னையில் மட்டும் 1,300 பேர் குணமடைந்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சுகாதாரத் துறை, தமிழகத்தில் இதுவரை சுமார் 1.26 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாகவும் சுமார் 51 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.