கொவிட்-19 சோதனை: சென்னை மாநகராட்சிக்கு முதலிடம்

கொவிட்-19 சோதனை: சென்னை மாநகராட்சிக்கு முதலிடம்

1 mins read
07282e19-5021-47b4-af3a-6c7a40ac4362
கோப்புப்படம்: ஊடகம் -

சென்னை: இந்­திய அள­வில் கொவிட்-19க்கான பரி­சோ­த­னையை மேற்­கொள்­வ­தில் சென்னை மாந­க­ராட்சி முத­லி­டத்­தில் இருப்­ப­தாக அதன் ஆணை­யர் பிர­காஷ் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், மாந­க­ராட்சி சார்­பில் இது­வரை 5.5 லட்­சம் பரி­சோ­த­னை­க­ளைச் செய்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

இப்­போது நாள்­தோ­றும் 15 ஆயி­ரம் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­க­வும் உரிய சிகிச்­சை­ய­ளித்­தல், தனி­மைப்­ப­டுத்­து­தல் உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­க­ளால் சென்­னை­யில் தொற்­றுப் பர­வல் விகி­தம் குறைந்து வரு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

மேலும் சிகிச்சை பெற்று குணமடை­யும் விகி­தம் 80 விழுக்­கா­டாக அதி­க­ரித்­துள்­ள­தைச் சுட்­டிக்­காட்­டிய அவர், அவ­சர பயண அனு­மதி பெற்று சென்­னைக்­குள் நுழை­ப­வர்­கள் 14 நாட்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

"சென்­னை­யில் கொரோனா பாது­காப்பு வழி­மு­றை­க­ளைப் பின்­பற்­றாத அங்­கா­டி­கள், சந்தை வளா­கத்தை மூட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அங்­கா­டி­க­ளுக்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­கள் அனை­வ­ரும் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருப்­ப­தை­யும் கிரு­மி­நா­சி­னி­யைப் பயன்­ப­டுத்­து­வ­தை­யும் உறுதி செய்­ய­வேண்­டும் என்று அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது," என்­றார் ஆணை­யர் பிர­காஷ்.