பாஜக மீது அதிமுக தலைமை அதிருப்தி

பாஜக மீது அதிமுக தலைமை அதிருப்தி

2 mins read
101a1644-37c4-4bf5-870a-f9c1a669a1c0
மீன்­வளத்­துறை அமைச்­சர் ஜெயக்­கு­மார். கோப்புப்படம்: ஊடகம் -

சென்னை: அதி­முக-பாஜக இடையே திடீ­ரென மூண்­டுள்ள கருத்து மோதல் அர­சி­யல் களத்­தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இரு­த­ரப்­புக்­கும் இடையே கார­சா­ர­மான வார்த்­தைப் போர் தொடங்கி உள்­ளது.

எதிர்­வ­ரும் சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் இவ்­விரு கட்­சி­களும் கூட்­டணி அமைக்­கும் என அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கணித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், அண்­மை­யில் கோவை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய பாஜக மூத்த தலை­வர் சி.பி. ராதா­கி­ருஷ்­ணன், தமி­ழ­கத்­தில் சட்­டம் ஒழுங்­கைப் பாது­காப்­ப­தில் மாநில அரசு உறு­தி­யாக இருக்­க­வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார்.

இல்­லை­யேல் சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் அதி­மு­க­வால் வெற்றி பெற இய­லாது என்­றும் அவர் குறிப்­பிட்­டார். அவ­ரது இக்கருத்து அதி­முக தலை­மைக்கு கடும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்தி உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து மீன்­வளத்­துறை அமைச்­சர் ஜெயக்­கு­மார் பதி­லடி கொடுத்­துள்­ளார்.

அதி­மு­க­வுக்கு மக்­க­ளின் ஆத­ரவு உள்­ளது என்று குறிப்­பிட்­டுள்ள அவர், சி.பி. ராதா­கி­ருஷ்­ண­னின் கருத்து மக்­கள் மத்­தி­யில் எடு­ப­டாது என்­றும் தமி­ழ­கத்­தில் மீண்­டும் அதி­முக ஆட்சி அமைப்­பதை அவர் நேரில் காண்­பார் என்­றும் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அதி­முக முன்­னாள் எம்பி அன்­வர் ராஜா, பாஜக சார்­பில் தெரி­விக்­கப்­பட்ட கருத்து அதிமுக­வுடன் கூட்­டணி வேண்­டாம் என்­ப­து போலத்­தான் இருக்­கிறது என்­றார்.

அதி­முக உடன் கூட்­டணி வைத்­தால் சில கட்­சி­க­ளுக்கு லாபம் என்­றும் இல்­லை­யெ­னில் அவர்­க­ளுக்­கு­த்தான் நஷ்­டம் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

"2016ஆம் ஆண்டு தேர்­த­லில் கூட்­டணி இல்­லா­மல் அதி­முக வெற்­றி­பெற்­றுள்­ளது. சி.பி ராதா­கிருஷ்­ணன் மற்­றும் பாஜக தலை­வர் முரு­கன் சொல்­லக்­கூ­டிய கருத்து எவ்­வ­ளவு நியா­ய­மா­னது? எவ்­வ­ளவு உள்­நோக்­கம் கொண்­டது? என்­ப­தற்கு காலம்­தான் பதில் சொல்ல வேண்­டும்," என்­றார் அன்­வர் ராஜா.