கிருமி பாதிப்பைக் குணப்படுத்த பிளாஸ்மா தானத்திற்கு வலியுறுத்து

1 mins read
d616c018-b414-44dc-806e-d95e8181bee0
-

சென்னை: கண்­தா­னம், உறுப்­பு­தா­னம், ரத்த தானத்­தில் முன்­னணி வகிக்­கும் தமி­ழக மக்­கள், கொரோனா கிரு­மித்­தொற்றை குணப்­ப­டுத்­தும் பிளாஸ்மா தானம் செய்­ய­வும் முன்­வர வேண்­டும் என சுகாதாரத்­துறை அமைச்­சர் விஜய பாஸ்­கர் அழைப்பு விடுத்­துள்­ளார்.

நாட்­டி­லேயே டெல்­லிக்கு அடுத்த படி­யாக சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்­து­வ­ம­னை­யில் 2 கோடியே 34 லட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் பிளாஸ்மா வங்கி தொடங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த வங்­கி­யைத் தொடங்கி வைத்­த­பின் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய விஜ­ய­பாஸ்­கர், "கொரோனா நோயா­ளி­க­ளுக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன் அளிக்­கிறது.

"கொரோ­னா­வில் இருந்து குண மடைந்­தோர் 14 நாட்­க­ளுக்கு பிறகு தைரி­ய­மாக பிளாஸ்மா தானம் அளிக்­க­லாம். உயர் ரத்த அழுத்­தம், நீரி­ழிவு உள்­ளிட்ட நோய் பாதித்­த­வர்­கள் பிளாஸ்மா தானம் அளிக்க முடி­யாது.

"ராஜீவ்­காந்தி மருத்­து­வ­மனை யைத் தொடர்ந்து, ஸ்டான்லி, ஓமந்­தூ­ரார், சேலம், திருச்சி, கோவை, நெல்லை அரசு மருத்­துவமனை­களி­லும் இந்த திட்­டம் விரிவு படுத்­தப்­பட உள்­ளது," என்று தெரிவித்­தார்.

இதற்­கி­டையே, கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்டு குண­ம­டைந்த பர­மக்­குடி தொகுதி அதி­முக எம்­எல்ஏ சதன் பிர­பாகா் முதல் நப­ராக பிளாஸ்மா தானம் செய்­தார்.

கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்டு குணமடைந்­த­வா்­க­ளின் ரத்­தத்­தி­லி­ருந்து பிளாஸ்மா அணுக்­களை மட்­டும் பிரித்­தெ­டுத்து அதனைத் தேவைப்படும் நோயா­ளி­க­ளுக்கு செலுத்தி சிகிச்­சை அளித்து வருகின்றனர்.